கோயமுத்தூர்: கோயமுத்தூர் ரயில் நிலையத்தில், பயணிகள் கண் முன்னே, திடீரென தண்டவாளத்தில் குதித்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து, தற்கொலை செய்துகொண்டார். இந்தக் கொடூரக் காட்சியை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கோவை ரேஸ்கோர்ஸ், டி.எஃப்.ஓ., காம்பவுண்ட் வளாக வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்தவர் தட்சிணாமூர்த்தி(43). கோவை கிணத்துக்கடவு பகுதியில் ஆர்.ஐ. – வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், குருபிரசாத்(8), தனு வசந்த்(6) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை, ‘வாக்கிங்’ செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற தட்சணாமூர்த்தி காலை 7 மணி அளவில், கோவை ரயில் நிலையம் சென்றார். அங்கே 6 ஆம் எண் பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக இருந்த கோவை- மயிலாடுதுறை சதாப்தி எக்ஸ்பிரஸ் முன், திடீரென பிளாட்பாரத்தில் இருந்து கீழே குதித்து தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார். நொடிப் பொழுதில், அவர் மீது ரயில் சக்கரம் ஏறி, தலை துண்டாக்கி துடிதுடித்து பலியானார். இந்த ‘பகீர்’ காட்சியைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.ஐ.யின் திடீர் தற்கொலை குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தட்சிணாமூர்த்தி பலரிடம் ரூ.3௦ லட்சம் வரை கடன் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டத்தை சந்தித்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கியதால், இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாகத் தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!
துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது. அவர்களுக்கு பாராட்டுகள்.
கல்வி
1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!
சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.
கட்டுரைகள்
சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!
துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது. அவர்களுக்கு பாராட்டுகள்.
கல்வி
1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!
சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.
கட்டுரைகள்
சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
நெல்லை
முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!
பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு
உரத்த சிந்தனை
இந்திய மண்ணில் சிக்கிய சிஐஏ ஏஜெண்ட்! மணிப்பூர், மிசோரம்… என்ன நடக்குது இங்கே!
NIA Arrests Six Ukrainians And One American Over Alleged Terror Training In Myanmar From Indian Soil
சற்றுமுன்
விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Entertainment News
Previous article

