பயணிகள் கண் முன் பகீர்: ரயில் முன் தலைவைத்து ஆர்.ஐ., தற்கொலை

கோயமுத்தூர்: கோயமுத்தூர் ரயில் நிலையத்தில், பயணிகள் கண் முன்னே, திடீரென தண்டவாளத்தில் குதித்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து, தற்கொலை செய்துகொண்டார். இந்தக் கொடூரக் காட்சியை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கோவை ரேஸ்கோர்ஸ், டி.எஃப்.ஓ., காம்பவுண்ட் வளாக வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்தவர் தட்சிணாமூர்த்தி(43). கோவை கிணத்துக்கடவு பகுதியில் ஆர்.ஐ. – வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், குருபிரசாத்(8), தனு வசந்த்(6) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை, ‘வாக்கிங்’ செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற தட்சணாமூர்த்தி காலை 7 மணி அளவில், கோவை ரயில் நிலையம் சென்றார். அங்கே 6 ஆம் எண் பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக இருந்த கோவை- மயிலாடுதுறை சதாப்தி எக்ஸ்பிரஸ் முன், திடீரென பிளாட்பாரத்தில் இருந்து கீழே குதித்து தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார். நொடிப் பொழுதில், அவர் மீது ரயில் சக்கரம் ஏறி, தலை துண்டாக்கி துடிதுடித்து பலியானார். இந்த ‘பகீர்’ காட்சியைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.ஐ.யின் திடீர் தற்கொலை குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தட்சிணாமூர்த்தி பலரிடம் ரூ.3௦ லட்சம் வரை கடன் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டத்தை சந்தித்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கியதால், இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாகத் தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories