மதுரை தென்கால் கண்மாயில் பேரிடர் மீட்பு ஒத்திகை!

Published:

madurai-fire-dept

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மதுரை தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்புப் பணிகள் ஒத்திகை நடைபெற்றது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் தென்மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சரவணகுமார் மதுரை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் கல்யாண் குமார் ஆகியோர் முன்னிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏற்படும் பேரிடர் மீட்பு குறித்து ஒத்திகை நடைபெற்றது.

இதற்காக தென்கால் கண்மாயில் தீயணைப்புத் துறை ஊழியர்கள் பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்காகவும். வெள்ளம் போன்ற பேரிடர் சூழ்நிலையில் உள்ளவர்களை மீட்பதற்காகவும் ஒத்திகை நடைபெற்றது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img