லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், புரோக்கர் இருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது!

bribe - 2026

மேலூரில் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அவருக்கு துணை புரிந்த புரோக்கர் மூக்கன் ஆகிய இருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மதுரை மாவட்டம், மேலூரில், லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அவருக்கு துணை புரிந்த புரோக்கர் மூக்கன் ஆகிய இருவரும் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், அலங்காநல்லூரைச் சேர்ந்த மணிகண்டன்(46). என்பவர் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். மேலூர் கருத்தபுளியன்பட்டியில் வசிக்கும் பிரபு என்பவர் தனது மனைவி மாலதிக்கு 15 லட்ச ரூபாய் சொத்து மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்காக துணை வட்டாட்சியர் மணிகண்டனை அணுகியுள்ளார்.

அதற்கு அவர், ரூ. 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அந்தத் தொகையை புரோக்கர் மூக்கனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில், பிரபு லஞ்ச ஒழிப்பு போலீசாரை அணுகியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் 20,000- த்தை இன்று மாலை 6 மணி அளவில் பிரபு, மேலூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று துணை வட்டாட்சியர் மணிகண்டனிடம் லஞ்ச பணத்தை புரோக்கர் மூக்கனிடம் கொடுக்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் கொடுக்குமாறு சமிக்கை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, லஞ்ச பணத்தை மூக்கனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மூக்கனையும், துணை வட்டாட்சியரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில், துணை வட்டாட்சியர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டது மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories