செல்போனில் சிறுமிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது!

child abuse - 2026

அருப்புக்கோட்டை அருகே, மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் தனபாலன் (57). காரியாபட்டி அருகே, நாகனேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 2008 முதல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் மாணவ, மாணவியர் 40 பேர் படித்து வருகின்றனர். தனபாலன் மற்றும் ஒரு ஆசிரியை மட்டும் பள்ளியில் உள்ளனர்.

கடந்த 10ம் தேதி மதியம் ஆசிரியர் தனபாலன், 3ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேரை சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு அழைத்து சென்று, தனது செல்போனில் ஆபாச படங்களை காண்பித்துள்ளார். பின் 3 பேருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வகுப்பறையில் மாணவர்கள் கூச்சலிட்டதால், ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க 5ம் வகுப்பு மாணவி ஒருவர் தனபாலனிடம் வந்தார். அப்போது அவர், மாணவிகளிடம் ஆபாச படம் காண்பித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக செல்போனை பறித்துள்ளார்.இதில் செல்போன் கீழே விழுந்து சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3 மாணவிகளும், தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனே மாணவிகளின் பெற்றோர், ஊர்மக்கள் திரண்டு நேற்று பள்ளிக்கு சென்று ஆசிரியர் தனபாலனிடம் கேட்டுள்ளனர். அப்போது, ‘தெரியாமல் செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று கெஞ்சியுள்ளார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். எஸ்ஐ ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து தனபாலனை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை திருவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மூர்த்தியிடம் கேட்டபோது, ‘ஆசிரியர் தனபாலன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மாணவிகளுக்கு ஆசிரியரே செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது அருப்புக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories