December 5, 2025, 8:39 PM
26.7 C
Chennai

செல்போனில் சிறுமிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது!

child abuse - 2025

அருப்புக்கோட்டை அருகே, மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் தனபாலன் (57). காரியாபட்டி அருகே, நாகனேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 2008 முதல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் மாணவ, மாணவியர் 40 பேர் படித்து வருகின்றனர். தனபாலன் மற்றும் ஒரு ஆசிரியை மட்டும் பள்ளியில் உள்ளனர்.

கடந்த 10ம் தேதி மதியம் ஆசிரியர் தனபாலன், 3ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேரை சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு அழைத்து சென்று, தனது செல்போனில் ஆபாச படங்களை காண்பித்துள்ளார். பின் 3 பேருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வகுப்பறையில் மாணவர்கள் கூச்சலிட்டதால், ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க 5ம் வகுப்பு மாணவி ஒருவர் தனபாலனிடம் வந்தார். அப்போது அவர், மாணவிகளிடம் ஆபாச படம் காண்பித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக செல்போனை பறித்துள்ளார்.இதில் செல்போன் கீழே விழுந்து சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3 மாணவிகளும், தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனே மாணவிகளின் பெற்றோர், ஊர்மக்கள் திரண்டு நேற்று பள்ளிக்கு சென்று ஆசிரியர் தனபாலனிடம் கேட்டுள்ளனர். அப்போது, ‘தெரியாமல் செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று கெஞ்சியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். எஸ்ஐ ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து தனபாலனை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை திருவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மூர்த்தியிடம் கேட்டபோது, ‘ஆசிரியர் தனபாலன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மாணவிகளுக்கு ஆசிரியரே செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது அருப்புக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories