சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

sivakasi fire works accident - 2026

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஜெயசங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன.

இதில் இன்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி வித்தில் சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 7பேர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் சேதமடைந்த நிலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறி வருகிறது.

சம்பவ இடத்தில் சார் ஆட்சியர் பிரியா ரவிசந்திரன் மற்றும் காவல்துறை வருவாய்த்துறை மற்றும் மத்திய வெள்ளி பொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நெடுங்குளத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

சிவகாசி அருகே உள்ளது நெடுங்குளம். இங்கு, ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு தொழிற்சாலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பேன்சி ரக பட்டாசுகளுக்கான வேதிப் பொருட்களை கலக்கும் அறையில் எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டது. இதில் கண் இமைக்கு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

3 பேர் பலி : இந்த விபத்தில் பட்டாசுகள் தயாரிக்கும் 16 அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (35), சொக்கம்பட்டியைச் சேந்த மாரியம்மாள்(38), கூமாபட்டியைச் சேர்ந்த திருவாய்மொழி(40) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

7 பேர் காயம் : மேலும், எம். புதுப்பட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி(50), ரெங்கபாளையத்தைச் சேர்ந்த லட்சுமி(38), கோபாலன்பட்டியைச் சேர்ந்த ராமசுப்பு(43), ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை சக தொழிலாளர்கள் உதவியுடன் மீட்ட காவல்துறையினர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும், இந்த விபத்தில் கோபாலன்பட்டியைச் சேர்ந்த முனியம்மாள்(48), கூமாப்பட்டியைச் சேர்ந்த பாத்திமுத்து(53), ராபீயாபீவி(48), கோமதி(35) ஆகிய 4 பேர் லேசான காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை வேறு பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த வெடி விபத்து குறித்து எம். புதுப்பட்டி காவல் நிலையத்தினர் ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர், போர்மேன் சுப்புராஜ், மேலாளர் ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிமம் ரத்து : இந்நிலையில், வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையை ஆய்வு செய்த சிவகாசி சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ஆலையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories