அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தோர் மீது நடவடிக்கை கோரி போக்குவரத்துப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published:

மதுரை:

மதுரை மாவட்டம் மேலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஜன.28 ஆம் தேதி, நடத்துனர் பாஸ்கரனை தாக்கிய அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்த 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்துப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

இந்நிலையில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது,

உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்காவிட்டால் , மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும் போராட்டம் நடைபெறும் என மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img