February 8, 2025, 3:37 PM
30.8 C
Chennai

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

#image_title

நாகர்கோவில் – ஐதராபாத் – கச்சகுடா இடையே தற்போது இயங்கும் இரண்டு ரயில்களில் ஒன்றை திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம் ,கொல்லம் -செங்கோட்டை -ராஜபாளையம் செக்கந்ராபாத் சிறப்பு ரயில்களை வாரம் இருமுறை நிரந்தரமாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் – ஐதராபாத் கச்சகுடா இடையே தற்போது இயங்கும் இரண்டு ரயில்களில் ஒன்றை திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் முரளி, செயலர் கிருஷ்ணன், பொருளாளர் DRUCC உறுப்பினர் சுந்தரம், ஊடக மற்றும் மக்கள் தொடர்பாளர் ராமன் ஆகியோர் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சரகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று ஜன.19ல் மின்னஞ்சலில் அனுப்பிய வேண்டுகோள்.

தற்போது நாகர்கோவில் ஐதராபாத் கச்சகுடா இடையே இரண்டு வாராந்திர ரயில்கள் இயக்கப்படுகின்றன. சனிக்கிழமைகளில் வண்டி எண் 16354ம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வண்டி எண் 07436ம் நாகர்கோவில் சந்திப்பு கச்சகுடா இடையே ஓடுகின்றன.

தற்போது திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் வழியாக ஐதராபாத் கச்சகுடாவுக்கு எந்த ஒரு ரயிலும் இல்லை.
இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

மேலும் அம்பை கல்லிடைக்குறிச்சி கீழக்கடையம் பாவூர் சத்திரம் தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் ராஜபாளையம் சிவகாசி ஊர்களை சேர்ந்த ஏராளமான தமிழக பொறியாளர்கள் ஐதராபாத் சாப்ட்வேர் கம்பெனிகளில் பணி புரிகின்றனர்.

எனவே தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகளும் மதுரை கோட்ட அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து ஒரு நாகர்கோவில் ஐதராபாத் கச்சகுடா ரயிலை திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் திருப்பி விட வேண்டும் என வேண்டியுள்ளனர்.

திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம் ,கொல்லம் -செங்கோட்டை -ராஜபாளையம் செக்கந்ராபாத் சிறப்பு ரயில்கள் பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த இரு ரயில்களை வாரம் இருமுறை நிரந்தரமாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories