வியாபரிக்கு கொலை மிரட்டல்

Published:

கீழப்பாவூரில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு
 கீழப்பாவூரில் கடன் வாங்கிய  பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதுடன், கடன் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு  தலைமறைவான அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
  பாவூர்சத்திரம், மேலப்பாவூர் சாலையில் வசித்து வருபவர் த.முருகன். இவர் ஆலங்குளம் வட்டார டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். பணி நிமித்தமாக கீழப்பாவூர் டாஸ்மாக் கடைக்கு அடிக்கடி வரும்போது, டாஸ்மாக் கடையின் அருகே பெட்டிக்கடை வைத்துள்ள ஆ.செல்வராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 இதனைத்தொடர்ந்து கடந்த 15.2.2015 அன்று செல்வராஜிடம் தனது வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றிற்காக 2 மாதத்தில் திருப்பித் தருவதாகக் கூறி ரூ.2.40 லட்சம் முருகன் கடன் வாங்கினாராம். ஆனால் பல மாதங்கள் ஆகியும் கடனை முருகன் திருப்பி கொடுக்க வில்லையாம்.
 இந்நிலையில், கடந்த புதன்கிழமை முருகனின் வீட்டுக்கு சென்ற செல்வராஜ்  கடனை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது பணத்தை திருப்பித் தர மறுத்ததுடன் செல்வராஜை கொலை செய்து விடுவதாக முருகன் மிரட்டினாராம்.
  இதுகுறித்து செல்வராஜ் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் மைனர்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளரைத் தேடி வருகிறார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img