திருச்சி விமான நிலையத்துக்கு மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட அன்புமணி வேண்டுகோள்

திருச்சி:
திருச்சி விமான நிலையத்துக்கு மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:
 
திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

நாட்டிற்கு சேவை செய்த தலைவர்கள் மற்றும் நாட்டுக்கு பெருமை சேர்த்த தலைவர்களை பெருமைப் படுத்தும் வகையில் அவர்களின் பெயர்களை வானூர்தி நிலையங்களுக்கும், பிற அமைப்புகளுக்கும் சூட்டுவது வழக்கமாக உள்ளது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரும் சூட்டப் பட்டிருக்கிறது. இதன்மூலம் அந்த தலைவர்களுக்கு பெருமை சேர்க்கப்பட்டிருப்பதுடன், சென்னை விமான நிலையத்தின் முனையங்களுக்கு சிறந்த அடையாளமும் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களுக்கும்  இதேபோல் பெயர் சூட்ட மத்திய&மாநில அரசுகள் முன்வர வேண்டும். ஆனால், இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது நல்வாய்ப்புக்கேடானது.

திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரை சூட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். வீரத்தின் விளைநிலமாக விளங்கியவர்;  அண்டை நாட்டு மன்னர்களுடன் நல்லுறவைப் பேணியதுடன், போர்க்களங்களில் அவர்களுக்கு உதவியவர்; சேர, சோழ, பாண்டியர்கள் என  மூவேந்தர்களின் ஆளுகைக்குள் இருந்த தரைப்பகுதிகளை பெரும்பிடுகு மன்னரும், அவரது வம்சாவளியினரும் ஆட்சி செய்ததாக அவர்களின் தலைநகராக விளங்கிய செந்தலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. 1300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர். இத்தகைய சிறப்பு மிக்க பெரும்பிடுகு மாமன்னரின் பெயரை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சூட்டுவது தான் அனைத்து வகைகளிலும் பொருத்தமானதாகும்.

ஏற்கெனவே, திருச்சி மாவட்டத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்ட போது, திருச்சி மாவட்டத்தின் பெயரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பெயர்  நீக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசரின் பெயர் சூட்டப்படுவதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதை மதிக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் சூட்ட மத்திய அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

Topics

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories