தஞ்சையில் பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி புகார் ஒன்றை அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் விஜயகாந்த் உள்ளிட்ட 50 பேர் மீது இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக, 4 பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


