புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசியக் குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில், கட்சியின் மூத்த உறுப்பினர்களான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தில்லி சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்த ஆம் ஆத்மி கட்சியில் இப்போது உட்கட்சிப் பூசல் பூதாகாரமாக வெடித்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக கட்சியை நிறுவிய உறுப்பினர்களில் முக்கியமானவர்களான பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்நிலையில், கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம், சனிக்கிழமை இன்று நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் , “உள்கட்சி ஜனநாயகம், வெளிப்படையான தன்மை, தொண்டர்களை மதித்தல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட கட்சி என கருதப்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, இன்று பிற கட்சிகளால் கேள்வி கேட்கப்படுகிற நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. பாரதீய ஜனதா, காங்கிரசுடன் இணைத்து வைத்து ஆம் ஆத்மியும் பார்க்கப்படுவது வேதனை அளிக்கிறது” என்றனர். மேலும், கட்சிக்கு ரூ.2 கோடி நிதி வந்த விவகாரம் குறித்து லோக்பால் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினோம். காங்கிரஸ் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சி அமைக்க முயற்சித்த பிரச்னை, மதுபானங்கள் பறிமுதல் செய்த பிரச்னை ஆகியவற்றை எழுப்பினோம். இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நாங்கள் கேஜ்ரிவாலுக்கு எதிரானவர்கள் என்று எங்களைக் கூறுகின்றனர். கட்சி, பழைய பாதைக்கு திரும்ப வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம். பிற கட்சிகளின் பாதையில் ஆம் ஆத்மி செல்லக்கூடாது” என்றனர். கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரிபோல செயல்படுவதாகக் கூறிய பிரசாந்த் பூஷண் “நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது. அதை நாங்கள் எதிர்த்தோம். ஆனால் ஆம் ஆத்மி அரசை ஆதரிக்க மாட்டோம் என காங்கிரஸ் அறிவித்தது. இது கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது” என்றார். இவ்வாறு குழப்பமான சூழ்நிலையில் இன்று அக்கட்சியின் தேசியக் கவுன்சில் கூடுகிறது.
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

