வெள்ளை வேட்டி
வெள்ளச் சட்டை பாருங்கோ – இன்று
கொள்ளக் காரன்
கொண்ட வேடம் தானுங்கோ !
கோடி கோடி
கொண்டு போறான் பாருங்கோ – அவன்
ஓடி வந்து
ஓட்டுக் கேப்பான் போடுங்கோ !
குடும்ப மாகக்
கூறு போட வாராங்கோ – அந்தக்
கொடுங் கோலன்
குணத்தைக் கொஞ்சம் பாருங்கோ !
தானே தமிழின்
தானைத் தலைவன் என்பாங்கோ – நீங்க
தானே எனக்கு
தாயும் தகப்பன் என்பாங்கோ !
கள்ளப் பணத்தை
கணக்குப் பார்த்து வைப்பாங்கோ – தங்கள்
பிள்ளை பேரில்
பித்த லாட்டம் செய்வாங்கோ !
துட்டு வாங்கி
ஓட்டுப் போட வேணாங்கோ – மனம்
தொட்டு நல்ல
தூய ஆட்சி கேளுங்கோ !
உள்ள தெல்லாம்
உரைச்சுப் புட்டேன் கேளுங்கோ – இந்தக்
கள்ள ஒட்டுக்
காரன் கூட்டம் ஓட்டுங்கோ !
– கவிஞர் : மீ.விசுவநாதன்


