புதுதில்லி: தான் கேஜ்ரிவாலுக்கு முன்னர் கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பக் கேட்கிறார் அக்கட்சி நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர். ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான தில்லியைச் சேர்ந்த குந்தன் ஷர்மா என்பவர் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு பைக்கும், நீல நிற வேகன் ஆர் கார் ஒன்றும் பரிசளித்திருந்தார். அந்தக் காரைத்தான் அரவிந்த் கேஜ்ரிவால் தினமும் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்குள் அண்மைக் காலமாக நடந்து வரும் உள்கட்சி குழப்பங்களில் அதிருப்தி அடைந்த குந்தன் ஷர்மாவுக்கு, கட்சியின் அரசியல் விவகாரக் குழுவிலிருந்து யோகேந்திர யாதவையும் பிரஷாந்த் பூஷணையும் நீக்கியது மிகவும் வேதனையைக் கொடுத்துள்ளது. இதனால் தான் கொடுத்த பைக், கார், நன்கொடை நிதி அனைத்தையும் திரும்ப ஒப்படைக்குமாறு குந்தன் ஷர்மா, கேஜ்ரிவாலை தனது டிவிட்டர் பக்கம் மூலம் கேட்டுக் கொண்டார். “கட்சியின் லோக்பால் படி விசாரணை நடத்தாமல் யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷணை வெளியேற்றியது ஏன்?. தில்லியில் ஆட்சியை அமைப்பதற்காக நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை, தில்லியில் ஆட்சி அமைப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள்,” என்று குந்தன் ஷர்மா தெரிவித்துள்ளார். நான் பரிசாக அளித்தவற்றை திரும்பக் கேட்கும் அளவுக்கு தரம் தாழ்ந்த நபரில்லை. ஆனாலும், கேஜ்ரிவாலின் கவனத்தை அடையவே இதனை நான் தெரிவித்துள்ளேன்.. என்று குந்தன் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், குந்தன் ஷர்மா, ஆம் ஆத்மி கட்சிக்கு தான் வழங்கிய நன்கொடை குறித்த தகவலை தெரிவிக்கவில்லை.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
மதுரை
விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.
மதுரை
உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
மதுரை
விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.
மதுரை
உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.
உங்களோடு ஒரு வார்த்தை
வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
கட்டுரைகள்
சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
Entertainment News
Previous article

