4 மாதங்களில் அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுமா?

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அலுவலக சாவி யாருக்கு சொந்தமாகும்? பொதுக்குழு வில் சொன்னபடி  4 மாதங்களில் அக்கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 4 மாதங்களில் பொதுச் செயலர் பதவிக்குத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 பொதுச்செயலர் தேர்தலை பொதுக்குழு நடைபெற்ற ஜூலை 11-இல் இருந்து 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
 ஆனால், தற்போதைய நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை அதிமுக அலுவலகத்தில் இருந்தே மேற்கொள்ள முடியும். பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க குறிப்பிட்ட தேதியை அறிவித்து, குறிப்பிட்ட இடத்தில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.

 அதைப்போல அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கியமான ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் பட்டியல் விவரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. பொதுச் செயலர் பதவியை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பட்டியல் முக்கியமானதாகும்.

 இது தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் எப்போது மேற்கொண்டு, அதன் தீர்ப்பைக் கூறப்போகிறது எனத் தெரியவில்லை. இதுபோன்ற காரணங்களால் அதிமுக ராயப்பேட்டை தலைமை ‌அலுவலகம் யாருக்கு வரும் அதிமுகவின் பொதுச் செயலர் பதவிக்கான தேர்தல் 4 மாதங்களில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

images 32 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

Topics

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Entertainment News

Popular Categories