April 23, 2025, 6:42 PM
34.3 C
Chennai

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

hindu
ohm

காஷ்மீரில் இந்துக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல், தேசத்தின் துக்க நாள் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

நேற்று காஷ்மீர் மாநிலத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் இந்திய இராணுவ உடையில் வந்து அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை ஈவிரக்கமின்றி படுகொலை செய்துள்ளனர்.

அதிலும் கொடுமையானது அவர்களின் மதத்தை கேட்டு, உடைகளை களைந்து உடல் உறுப்புகளை பார்த்து உறுதி செய்த பிறகு கொன்றுள்ளனர். மனைவி கண் முன்பே கணவனை கொன்றுள்ளனர். மனைவி தன்னையும் கொன்று விடுங்கள் என கூறியதற்கு, இதனை இந்திய பிரதமர் மோடிக்கு தெரிவிக்க வேண்டும் ஆகவே கொல்லாமல் விடுவதாக பயங்கவாதிகள் கூறியுள்ளனர்.

இந்த கொலை பாதக சம்பவம் ஒட்டுமொத்த இந்திய நாட்டையும் உலுக்கியுள்ளது. மத பயங்கரவாதம் எத்தகைய அபாயகரமானது என உலகத்திற்கு உணர்த்தியுள்ளது.

மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம் மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.

ALSO READ:  வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 சலுகை. அதனை நீக்கி மாநிலத்தை மூன்று பிரிவாக பிரித்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தான் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கொட்டம் ஒடுக்கப்பட்டது. அங்கு அமைதி திரும்பியது. காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் அமைதியுடன் வாழ ஆரம்பித்தனர்.

மேலும் அங்கு விவசாயம், சுற்றுலா மூலம் மக்கள் வளர்ச்சியின் அவசியத்தை உணரத் தொடங்கினர். மேலும் பாரதம் முழுவதிலிருந்தும், உலக மக்களும் காஷ்மீருக்கு சுற்றுலா வரத் துவங்கினர். இதனை பொறுக்க முடியாத பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த கோழைத்தனமான மத பயங்கரவாத கொடூரத்தை நடத்தியுள்ளனர்.

நமது நாட்டின் துரதிருஷ்டம் மக்கள் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து முழுவதுமாக அச்சமின்றி வெளிவரும் முன்னரே தேர்தலை நடத்த நீதிமன்றம் தலையிட்டது. எதிர்க்கட்சிகளும் அங்கு அமைதி திரும்பும் முன் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்தன.

ALSO READ:  சபரிமலை; பங்குனி உத்திரம் ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் ஆட்சி இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்து இருந்தால் இத்தகைய கொடூரம் நடந்து இருக்காது. ஆனால் எல்லாவற்றையும் அரசியலாக்கும் போக்குதான் இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு உதவுவதாக அமைகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

காஷ்மீர் மக்கள் இப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர். உண்மையில் இது நல்ல துவக்கம் என்றாலும் கண் எதிரே பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை பார்த்து மீண்டும் அந்த மக்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பது நமது கவலை.

பாரதத்தின் காஷ்மீர் எல்லை பகுதியான புல்வாமாவில் இராணுவ உடையில் வந்து இராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததுபோல இப்போதும் பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக ஒழிக்க இராணுவத்திற்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் துணை நிற்போம்.

இப்போது தருகின்ற பதிலடி இனி எந்த காலத்திலும் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் எந்த பயங்கர செயலையும் செய்ய அஞ்சும் அளவு இருக்க வேண்டும்.

உலக நாடுகள் அனைத்தும் கூட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை ஒழிக்க பாரததத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ALSO READ:  ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின் இரக்கமற்ற கொடிய தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.

நாம் நமது உறவினர்களை இழந்துள்ளோம். எனவே அருகில் உள்ள கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

ப்ளீஸ்… கூட்டத்துல இதையெல்லாம் பேசுங்களேன்! – தென்காசி எம்.பி.க்கு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் கோரிக்கைகள்!

இது ஒரு முக்கியமான கோரிக்கை! எளிதாக நிறைவேற்றக் கூடியது தான். காலையில் பொதிகை அதிவேக விரைவு ரயில் வண்டி எண் 12661 சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வரும்போது தென்காசிக்கு காலை

Entertainment News

Popular Categories