December 5, 2025, 9:19 PM
26.6 C
Chennai

ஜம்முவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அதிரடி அறிவிப்பு.!

kasmer 2 - 2025

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு திடீரென நீக்கியது.

மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லே ஆகிய யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழக் கூடாது என்பதால் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

vakkupathiu 2 - 2025

வெளி உலக தகவல் தொடர்பு இல்லை ஏதும் இல்லாமல் இருக்கிறது ஜம்மு காஷ்மீர்.

இந்த அசாதாரண நிலையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

மேலும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு எதிராக ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் நாடு முழுவதும் ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நியாயப்படுத்தும் பொதுக் கூட்டங்களையும் பாஜக நடத்தி வருகிறது.

vakkupthiu - 2025

இந்த சூழ்நிலையில் வரும் 24-ந் தேதி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு பிந்தைய முதலாவது தேர்தல் இது. ஆனால் இத்தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஜிஏ மிர், காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.

அதை செய்யாத நிலையில் தேர்தலை நடத்தினால் காங்கிரஸ் புறக்கணிக்கும் என்றார்.

தற்போதைய நிலையில் பாஜக மட்டும்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறது.

தேசிய மாநாட்டுக் கட்சி, பிடிபி, இடதுசாரிகள் ஆகியவற்றின் தலைவர்கள் சிறைகளில் இருப்பதால் அந்த கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுமா? என்பது சந்தேகமே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories