டெங்குவைத் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்!

vijaya baskar - 2026

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகின்றது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறுகையில்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் இருவர் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் 10 சதவீதம் பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. தற்போது மழை பெய்து வரும் சூழ்நிலையில், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கவும், டெங்கு, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொது சுகாதாரத் துறை பணியாளா்கள் பல்துறை அலுவலா்களுடன் இணைந்து ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இப்பணியாளா்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் பார்வையிட அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, பசியின்மை, கடுமையான மூட்டு வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும்.

ஆகவே, காய்ச்சல் ஏற்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். மருந்துக் கடை, பெட்டிக் கடைகளில் தாமாக மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்.

தற்போது பெய்யத் தொடங்கியுள்ள பருவமழை சுகாதாரத் துறைக்கு சவாலாக இருக்கும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories