திருமண வாக்குறுதி கொடுத்து பெண்களை ஏமாற்றும் ஆண்கள்.. எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

court-1
court-1

திருமணத்துக்கான உறுதி அளிக்கப்படாமல் இந்தியப் பெண்கள் ஓர் ஆணுடன் உடல் ரீதியான பந்தத்தில் ஈடுபடுவதில்லை என மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற இந்தூர் கிளை தெரிவித்துள்ளது.

திருமணம் செய்துகொள்வேன் என்று சத்தியவாக்கு அளிக்காமல் ஒருபோதும் அவர்கள் அத்தகைய உறவில் ஈடுபடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற இந்தூர் கிளைக்கு வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இளம் பெண் ஒருவர், தன்னை காதலித்த நபர், திருமணம் செய்வதாகக் கூறி தன்னுடன் உறவு கொண்டுவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக அப்பெண் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுபோத் அப்யங்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்தியா ஒரு பழமைவாத சமூகம். இந்திய தேசம் இன்னும், திருமணத்துக்கு முன்னதாக பெண்கள் ஆண்களுடன் உறவு கொள்ளும் நிலைக்கு வரவில்லை. ஒருவேளை அந்த உறவு திருமணத்தில் முடியும் என்று ஆணிடமிருந்து வாக்குறுதி இருந்தால் மட்டுமே அத்தகைய உறவு ஒருசில இடங்களில் நிகழலாம்.

இந்த வழக்கில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை அந்த இளம் பெண்ணுடன் தொடர்ந்து உறவில் இருந்துள்ளார். திருமணம் செய்துகொள்வேன் என்ற போர்வையில் தான் அந்த நபர் இளம் பெண்ணை தன் வசப்படுத்தி வைத்துள்ளார்.

அந்த நபருக்கும் ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியின் ஏமாற்று வேலை உறுதியாகிறது. அவர் ஜாமீன் பெற தகுதியற்றவர். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் அந்த நபர் மீது நம்பிக்கை கொண்டிருந்ததாலேயே அவர் ஏமாற்றியவுடன் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இந்தியப் பெண்களுடன் திருமணத்துக்கு முன் உறவு வைக்க நினைக்கும் ஆண்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2018-ஆம் ஆண்டிலேயே சம்பந்தப்பட்ட பெண் 18 வயதைக் கடந்தவராக இருந்தார் என்றும் தனது வாதிக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையேயான உடல் ரீதியான உறவு ஒருமித்த சம்மதத்துடனேயே நடந்தது என்றும் வாதிட்டார்.

வழக்கில் சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர், பாதிக்கப்பட்ட பெண் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர். இதனாலேயே இந்த வழக்கு கூடுதல் கவனம் பெற்றது.

இருவரும் திருமணம் செய்யவிருந்ததாகவும் ஆனால், பெண்ணின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories