முடிவடையும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுள்.. நாசா எடுத்த முடிவு!

International Space Station - 2026

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுள் 2031 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், அதனை கடலில் விழச் செய்து அழிக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 26 நாடுகளுக்கு சொந்தமான சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 1998- இல் தொடங்கப்பட்டது.

239 அடி நீளமும், 357 அடி அகலமும் கொண்ட இந்த விண்வெளி நிலையம் 400 கிமீ உயரத்தில் கடந்த 22 வருடங்களாக பூமியைச் சுற்றி வருகிறது.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஏராளமான விண்வெளி வீரர்கள் இதில் பல்வேறு விஞ்ஞான ஆராய்ச்சிகளை செய்துள்ளனர்.

விண்வெளியிலே உயிரியல், இயற்பியல், எரி நட்சத்திரங்கள், மருந்து, உணவு பொருட்கள் தயாரிப்பு, உலோகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பற்றி இங்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக லோ எர்த் ஆர்பிட்டில் அதாவது பூமியின் தாழ் வட்டப் பாதையில் வினாடிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வட்டமிட்டு வருகின்றது.

இந்த நொடி வரை மனித நாகரிகம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் சில அதி நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைவதற்கு இந்த ஆய்வகம் உதவி வருகின்றது.

2024 வரை சர்வதேச விண்வெளி நிலையம் இயக்கப்பட்ட அதன்பிறகு இதனை அழிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் இதன் ஆயுட்காலம் 2031 வரை நீட்டிக்கப்படும் என்று 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

அடுத்த 9 ஆண்டுகளில் இதில் நடத்தப்படவுள்ள ஆய்வுகள் பற்றியும்,2031- ல் இதனை செயலிழக்க செய்து கடலில் விழச் செய்யும் முறை பற்றியும் நாசா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி தெற்கு பசிபிக் பெருங்கடலில் பாயிண்ட் நெமோ என்ற மனிதர்களே இல்லாத பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இதை 2031 ஆம் ஆண்டு விழ செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பூமியின் வளி மண்டலத்திற்குள் சர்வதேச விண்வெளி நிலையம் நுழையும்போதே அதிக வெப்பத்தின் விளைவாக எரிந்து உடைந்து அதன் பெரும்பகுதி அழிந்து விடும். ஆனால் ஒரு சில வலுவான பாகங்கள் கடலில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக சீனா ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

2031 ஆம் ஆண்டுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் புதிய சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories