முடிவடையும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுள்.. நாசா எடுத்த முடிவு!

International Space Station - 2026

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுள் 2031 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், அதனை கடலில் விழச் செய்து அழிக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 26 நாடுகளுக்கு சொந்தமான சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 1998- இல் தொடங்கப்பட்டது.

239 அடி நீளமும், 357 அடி அகலமும் கொண்ட இந்த விண்வெளி நிலையம் 400 கிமீ உயரத்தில் கடந்த 22 வருடங்களாக பூமியைச் சுற்றி வருகிறது.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஏராளமான விண்வெளி வீரர்கள் இதில் பல்வேறு விஞ்ஞான ஆராய்ச்சிகளை செய்துள்ளனர்.

விண்வெளியிலே உயிரியல், இயற்பியல், எரி நட்சத்திரங்கள், மருந்து, உணவு பொருட்கள் தயாரிப்பு, உலோகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பற்றி இங்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக லோ எர்த் ஆர்பிட்டில் அதாவது பூமியின் தாழ் வட்டப் பாதையில் வினாடிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வட்டமிட்டு வருகின்றது.

இந்த நொடி வரை மனித நாகரிகம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் சில அதி நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைவதற்கு இந்த ஆய்வகம் உதவி வருகின்றது.

2024 வரை சர்வதேச விண்வெளி நிலையம் இயக்கப்பட்ட அதன்பிறகு இதனை அழிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் இதன் ஆயுட்காலம் 2031 வரை நீட்டிக்கப்படும் என்று 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

அடுத்த 9 ஆண்டுகளில் இதில் நடத்தப்படவுள்ள ஆய்வுகள் பற்றியும்,2031- ல் இதனை செயலிழக்க செய்து கடலில் விழச் செய்யும் முறை பற்றியும் நாசா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி தெற்கு பசிபிக் பெருங்கடலில் பாயிண்ட் நெமோ என்ற மனிதர்களே இல்லாத பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இதை 2031 ஆம் ஆண்டு விழ செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பூமியின் வளி மண்டலத்திற்குள் சர்வதேச விண்வெளி நிலையம் நுழையும்போதே அதிக வெப்பத்தின் விளைவாக எரிந்து உடைந்து அதன் பெரும்பகுதி அழிந்து விடும். ஆனால் ஒரு சில வலுவான பாகங்கள் கடலில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக சீனா ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

2031 ஆம் ஆண்டுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் புதிய சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories