ஒரே வகுப்பறை.. ஆனால் இரு ஆசிரியர்கள் இரண்டு மொழி பாடங்களும் ஒரே நேரத்தில்..பாவம் மாணவர்கள்..

சேலம் சீலநாய்க்கன்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒரே வகுப்பறையில் இரண்டு மொழி பாடங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது

இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 220 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இங்கு 12 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் மொத்தம் 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் ஒரே வகுப்பறையில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடம் நடத்துவதற்காக மாணவ மாணவிகள் அமர வைக்கப்பட்டு, ஒரே பிளாக் போர்ட்டை இரண்டாக பிரித்துக்கொண்டு ஒருபுறம் தமிழ் வழி பாடமும், இன்னொரு புறம் ஆங்கில வழி பாடமும் இரண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

இதனால், மாணவ-மாணவிகளுக்கு ஒரே வகுப்பறையில் இரண்டு மொழி பாடங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் பள்ளிக்கு பின்புறம் உள்ள சமையல் கூடம் அருகே 7-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் தரையில் அமர வைக்கப்பட்டு பாடம் நடைபெற்று வருகிறது. அதேபோல மரத்தடியில் பிளாக் போர்டை வைத்து ஆசிரியர் மற்றொரு வகுப்புக்கு பாடம் நடத்தி வருகிறார்கள். இதனால் வெயில் காலங்களிலும் மழை காலங்களிலும் மாணவர்கள் கடும் பாதிப்புள்ளாகும் நிலை உள்ளது. எனவே அரசு உடனடியாக கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகளவில் நடைபெற்ற போதிலும் தற்பொழுது போதிய வகுப்பறை இல்லாத காரணத்தினால் பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியை நோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதே நிலை நீடித்தால் இந்த அரசு பள்ளி விரைவில் மூடும் நிலை உருவாகும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பள்ளியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி அந்த பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

1725523 salem 1 - 2026
இக்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

Entertainment News

Popular Categories