ஒரே வகுப்பறை.. ஆனால் இரு ஆசிரியர்கள் இரண்டு மொழி பாடங்களும் ஒரே நேரத்தில்..பாவம் மாணவர்கள்..

சேலம் சீலநாய்க்கன்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒரே வகுப்பறையில் இரண்டு மொழி பாடங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது

இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 220 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இங்கு 12 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் மொத்தம் 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் ஒரே வகுப்பறையில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடம் நடத்துவதற்காக மாணவ மாணவிகள் அமர வைக்கப்பட்டு, ஒரே பிளாக் போர்ட்டை இரண்டாக பிரித்துக்கொண்டு ஒருபுறம் தமிழ் வழி பாடமும், இன்னொரு புறம் ஆங்கில வழி பாடமும் இரண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

இதனால், மாணவ-மாணவிகளுக்கு ஒரே வகுப்பறையில் இரண்டு மொழி பாடங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் பள்ளிக்கு பின்புறம் உள்ள சமையல் கூடம் அருகே 7-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் தரையில் அமர வைக்கப்பட்டு பாடம் நடைபெற்று வருகிறது. அதேபோல மரத்தடியில் பிளாக் போர்டை வைத்து ஆசிரியர் மற்றொரு வகுப்புக்கு பாடம் நடத்தி வருகிறார்கள். இதனால் வெயில் காலங்களிலும் மழை காலங்களிலும் மாணவர்கள் கடும் பாதிப்புள்ளாகும் நிலை உள்ளது. எனவே அரசு உடனடியாக கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகளவில் நடைபெற்ற போதிலும் தற்பொழுது போதிய வகுப்பறை இல்லாத காரணத்தினால் பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியை நோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதே நிலை நீடித்தால் இந்த அரசு பள்ளி விரைவில் மூடும் நிலை உருவாகும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பள்ளியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி அந்த பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

1725523 salem 1 - 2026
இக்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories