உதயநிதி இளைஞரணிச் செயலர் பதவியை எட்டிப் பிடித்தது எப்படி?!

onrekalpakkanaledu copy - 2026

எச்சரிக்கை: இன்றைய செய்தி நாளைய வரலாறு! இன்னும் 10 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் கீழ்க்காணும் ‘கற்பனை’ச் செய்தி வரலாறாக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப் பட்டால்… அதற்கு நாம் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டோம்! (பொறுப்புத் துறப்பு அறிவிப்பு!)


திமுக என்பது… ஏறத்தாழ 5 கோடி (????) உறுப்பினர்களைக் கொண்ட ஜனநாயக இயக்கம். அப்படிப்பட்ட மாபெரும் ஜனநாயக இயக்கத்திலே… துரைமுருகன், TR.பாலு, ஐ.பெரியசாமி, KN.நேரு உட்பட… 30 வயதுக்கும் கீழான (????) 1 கோடி இளைஞர்களைக் கொண்ட மாபெரும் இளைஞரணி செயல்படுகிறது.

கடந்த சிலநாட்களாக, திமுக இளைஞரணி செயலாளர் பதவி காலியாக உள்ளது. இதையறிந்த திமுக தொண்டர்கள்… இளைஞரணி செயலாளர் பதவிக்கு, திமுகவுக்காகவே தம் உடல், பொருள், ஆவி என்று அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்ட கடைக்கோடித் தொண்டன் தம்பி உதயநிதியை நியமிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராடினார்கள்.

இதைக் கேள்விப்பட்ட திமுக தலைவர் தளபதி ஸ்டாலின்… “வாரிசு அடிப்படையில் பதவி கொடுக்க… திமுக ஒன்றும் சங்கரமடமல்ல” என்று, வெகுண்டெழுந்தார். தன் தந்தையை போலவே, வாரிசு அடிப்படையில் பதவி கேட்கும் உடன் பிறப்புக்களை கண்டித்து, முரசொலியில் கடிதம் எழுதினார்.

“தலைவரே… எந்தக் காலத்தில், நம் கட்சியைப் போல சங்கரமடத்தில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுத்தார்கள் ?” என்று அப்பாவித்தனமாக கேட்டு பதில் கடிதம் எழுதிய தொண்டர் ஒருவர்… மண்டை உடைக்கப்பட்டு, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

‘உதயநிதியை நியமித்தே ஆகவேண்டும்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வைத்து, நாளுக்கு நாள் திமுகவினரின் போராட்டங்கள் வலுத்ததைத் தொடர்ந்து… இளைஞரணி செயலாளர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு நடத்த தளபதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மனுநீதிச் சோழன் வம்சத்தில் வந்த தன் மீது, ‘தன்மகன் என்பதற்காகவே, உதயநிதிக்கு… ஸ்டாலின் பதவி கொடுத்தான்’ என்று உலகம் பழி சொல்லி விடக்கூடாது… என்பதற்காகவே, தலைவர் இந்த நேர்முகத் தேர்வை நடத்தி, உதயநிதிக்கு பதவி கொடுப்பதை தவிர்க்கிறார்’ என்பதை திமுகவின் இளைஞரணியினர் புரிந்து கொண்டனர்.

udhayanidhi stalin karuna - 2026உடனடியாக, “இளைஞரணிச் செயலாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வில், உதயநிதியைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக்கூடாது” என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

நேர்முகத் தேர்வுக்கான தேதியும் வந்தது. வேறு யாரும் நேர்முகத் தேர்வை நடத்தி, தகுதியும் திறமையும் உள்ள திமுக.,வின் கடைக் கோடித் தொண்டன் ஒருவன் வரவேண்டிய அப்பதவிக்கு, தவறான வழியில் உதயநிதி வந்து விடக்கூடாது என்பதில்… தளபதி ஸ்டாலின் உறுதியாக இருந்தார்.

தானே அந்தத் தேர்வை நடத்தினார். நேர்முகத் தேர்வில் உதயநிதியைத் தவிர வேறுயாரும் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்த தளபதி ஸ்டாலின்… எரிமலையாக வெடித்தார்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கலைஞர் கற்றுக் கொடுத்த கட்சியின் ஜனநாயக மாண்பு அவரை கட்டிப்போட்டது. தலைவரின் முன்னால், உதயநிதி அமர வைக்கப்பட்டார்.

தளபதி ஸ்டாலின்… சிறிதும் ஈவிரக்கமின்றி, திராவகத்தில் தோய்த்த கேள்வி அம்புகளை, உதயநிதியை நோக்கி வீசினார்…

“உங்கள் பெயர் என்ன ?” … “உங்களின் வயது என்ன ?” … ‘நீங்கள் நடித்த படங்களின் பெயர் என்ன ?” …  “உங்களுக்கு பிடித்த கதாநாயகியின் பெயர் என்ன ?”

தளபதி அவர்கள்… கடைசியாக தன் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தார்!

“1-லிருந்து 10-வரைக்கும் சொல்லுங்கள்”…

உதயநிதி திகைத்தார். 1-லிருந்து வரிசையாக சொல்ல ஆரம்பித்து… ஒன்றிரண்டு எண்கள் விடுபட்டு தடுமாறியபோது, ஜன்னலருகில் நின்ற துரைமுருகன், ஜாடையின் மூலம் அதை சரிசெய்தார்.

எல்லா அஸ்திரங்களையும் அடித்து நொறுக்கிய உதயநிதியை ஏறிட்டுப் பார்க்க முடியாத வேதனையில், மேசைக்கு அடியில் தான் கையில் வைத்திருந்த கேள்விகளுக்கான துண்டுச்சீட்டை கசக்கி எறிந்தார், தளபதி ஸ்டாலின்.

தன் தாத்தாவைப் போலவே, தன் தந்தையைப் போலவே… மாசற்ற ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்ற மனஆறுதலில், மேசைக்கு அடியில் தான் கையில் வைத்திருந்த, பதில்களுக்கான துண்டுச் சீட்டை மடித்து, பாக்கெட்டில் சொருகிக் கொண்டு வெளியில் வந்தார் உதயநிதி.

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

விழாக்கோலம் பூண்டது அறிவாலயம். தமிழகமே ஆர்ப்பரித்தது.

அறிவாலயத்தின் உள்ளே… “எவ்வளவோ முயற்சித்தும், என்னால் உதயநிதியை வெல்ல முடியவில்லை அண்ணே…” என்று துரைமுருகன் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் தளபதி ஸ்டாலின்.

தனக்கு புத்தம்புது தலைவன் கிடைத்த மகிழ்ச்சியில்… இளைஞரணியின் பழமையான தொண்டர் துரைமுருகன், தன் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “தம்பீ… நீங்க11-லிருந்து 20-வரைக்கும் சொல்லச் சொல்லி கேட்டிருந்தாலும் கூட, கலைஞர் வழிவந்த ஜனநாயக முறைப்படி… உதயநிதிதான் வெல்வார். காரணம்… அது ராயல் ப்ளெட்” என்றார்.

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், டாக்டர் கலைஞரும் கற்றுக்கொடுத்த சமூகநீதியை எண்ணி… பெரும் வியப்பில் ஆழ்ந்தார் தளபதி ஸ்டாலின் !!!


பின்குறிப்பு: வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் கற்பனைச் செய்தி! செய்தியை எழுதியவருக்கு நன்றி!


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories