லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த இந்திய அணியா இது என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையும் விதத்தில், அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
சிறப்பாக செயல்பட்ட போதும் வெற்றிகரமான ஃபினிஷிங் அமையாமல், 18 ரன்களில் தோல்வி அடைந்ததை இந்திய ரசிகர்கள் ஜீரணிக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பதிவில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவில்… ஏமாற்றமான முடிவு. ஆனால் இறுதி வரை இந்திய அணியின் போராட்டத்தை பார்க்க முடிந்தது சிறப்பாக இருந்தது. உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணியின் பேட்டிங், பீல்டிங், பவுலிங் சிறப்பாக இருந்தது. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையில் ஓர் அங்கம். அடுத்து வரும் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்… என்று ஆறுதல் அளித்துள்ளார்.
A disappointing result, but good to see #TeamIndia’s fighting spirit till the very end.
India batted, bowled, fielded well throughout the tournament, of which we are very proud.
Wins and losses are a part of life. Best wishes to the team for their future endeavours. #INDvsNZ
— Narendra Modi (@narendramodi) July 10, 2019
இதனிடையே, பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் இரு முறையும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல இயலாமல் போயுள்ளது துரதிருஷ்டம் என்றும், அடுத்த உலகக் கோப்பையையாவது வெல்ல வேண்டும் என்று கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
தோனிக்கு கௌரவம் சேர்க்கும் வகையில் கோப்பையை வென்று கொடுத்திருக்கலாம் என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.


