சோகத்த… ஆத்து…! இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

Published:

india team - 2026

லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த இந்திய அணியா இது என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையும் விதத்தில், அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

சிறப்பாக செயல்பட்ட போதும் வெற்றிகரமான ஃபினிஷிங் அமையாமல், 18 ரன்களில் தோல்வி அடைந்ததை இந்திய ரசிகர்கள் ஜீரணிக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பதிவில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்… ஏமாற்றமான முடிவு. ஆனால் இறுதி வரை இந்திய அணியின் போராட்டத்தை பார்க்க முடிந்தது சிறப்பாக இருந்தது. உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணியின் பேட்டிங், பீல்டிங், பவுலிங் சிறப்பாக இருந்தது. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையில் ஓர் அங்கம். அடுத்து வரும் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்… என்று ஆறுதல் அளித்துள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் இரு முறையும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல இயலாமல் போயுள்ளது துரதிருஷ்டம் என்றும், அடுத்த உலகக் கோப்பையையாவது வெல்ல வேண்டும் என்று கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

தோனிக்கு கௌரவம் சேர்க்கும் வகையில் கோப்பையை வென்று கொடுத்திருக்கலாம் என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img