‘உத்தம’மான பெண் தாசில்தார் வீட்டில்… லட்ச லட்சமாய் ரூபாய் நோட்டுக் கட்டுகள்!

tahsildar fakecurrency - 2026

பெண் தாசில்தார் வீட்டில் நோட்டு கட்டுகள்! ரூபாய் 93 லட்சத்தை சீஸ் செய்த ஏசிபி அதிகாரிகள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தம தாசில்தாராக அரசாங்கத்திடமிருந்து விருது பெற்ற பெண் அதிகாரி, தன் வீட்டில் நோட்டுக் கட்டுகளை மறைத்து வைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸின் வேட்டையில் சிக்கினார்.

லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய விஆர்ஓ கொடுத்த புகாரின்படி தாசில்தார் வீட்டில் சோதனையிட்டு அதிகாரிகள் அங்கே கண்டுபிடிக்கப் பட்ட நோட்டுக் கட்டுகளை பார்த்து வாய்பிளந்து மலைத்து நின்றனர். கைப்பற்றிய ரொக்கம் 93 லட்சம் ரூபாய்.

ஓர் அரசாங்க அதிகாரி வீட்டில் இவ்வளவு அதிக ரொக்கம் பிடிபடுவது கடந்த பத்து ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

tahsildar fakecurrency1 - 2026ரங்காரெட்டி மாவட்டம் கேசம்பேட்டை மண்டலம் “தத்தாயப்பல்லி” யைச் சேர்ந்த “மாமிடிப்ல்லி பாஸ்கர்” என்ற விவசாயி தன் 9.07 ஏக்கர் நிலத்திற்கு ஒதுக்கிய நம்பர் சர்வேயில் இல்லை என்றும், அதனை சரி பார்க்கும் படியும் கோரிக்கை விடுத்து சில மாதங்களாக தாசில்தார் அலுவலகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்.

“கொந்துர்கா “என்ற இடத்தின் விஆர்ஓ.,வாக பணியில் இருக்கும் அனந்தய்யா, அதற்கு எட்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும் என்று பாஸ்கரிடம் வற்புறுத்தினார். தனக்கு 5 லட்ச ரூபாய் என்றும், தாசில்தார் லாவண்யாவுக்கு ரூ. 3 லட்சம் கொடுத்தால்தான் வேலை உடனடியாக முடிக்கப் படும் என்றும் கூறினார்.

tahsildar fakecurrency2 - 2026அரசாங்கப் பணியில் உள்ளவர்களுக்கு  லஞ்சம் தர வேண்டுமா என்று எண்ணிய பாஸ்கர் இந்த விஷயத்தை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார். ஊழல் தடுப்பு பிரிவுஅதிகாரிகள் கூறிய படி புதன்கிழமை தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்று விஆர்ஓ அனந்தய்யாவுக்கு 4 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கையில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார்.

ஆனால் இதில் தனக்கு தொடர்பு இல்லை என்றும் தாசில்தார் லாவண்யா உத்தரவுப் படியே லஞ்சம் வாங்கி வருவதாகவும் அனந்தய்யா தெரிவித்ததால் ஹயத் நகரில் உள்ள லாவண்யா வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்கு எல்லாம் 2000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக வெளி வரவே அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

மொத்தம் 93 லட்சம் ரொக்கமும் 50 பவுன் தங்கமும் பறிமுதல் செய்யப் பட்டது. இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். லாவண்யா உத்தமமான தாசில்தார் விருது பெற்றவர் என்பதுதான் இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி.

மத்திய அரசு இதற்காகத்தான் டிமானிடைசேஷன் என பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததும், அதன் பின்னும் இது போல் பணம் கைமாறியும், லஞ்சம் தலைவிரித்தாடுவதாலும்தான், மின்னணு பண பரிவர்த்தனையை அரசு ஊக்குவிக்கிறது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 COMMENT

  1. தாசில்தாருக்கு உண்மையிலேயே நல்ல பெயர் தான். லஞ்ச லாவண்யா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories