குழந்தைக்கும் ஹெல்மெட் மாட்டிவந்த பெண்: கைகொடுத்து பாராட்டிய போலீஸ்காரர்!

upcop deoria - 2026

தனது குழந்தைக்கும் ஹெல்மெட் மாட்டிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் முன்னே நிற்க வைத்து அழைத்து வந்த பெண்ணின் வாகனத்தை நிறுத்தி, சற்று நேரம் பாராட்டிப் பேசி… குழந்தைக்குக் கை கொடுத்து, அந்தப் பெண்ணுக்கும் வாழ்த்து சொல்லி, விழிப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளார் உ.பி. மாநில காவலர் ஒருவர்.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவிலும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் ராகுல் ஸ்ரீவத்ஸவ் என்ற காவலர்.

சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு குறித்து பல்வேறு பிரசாரங்களை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக, போக்குவரத்துப் பிரிவு போலீஸார் பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளையும் பிரசாரங்களையும் சாலைகளில் செய்து வருகிறார்கள்.

child helmet - 2026அவற்றையும் மீறி ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்ட் போடாமலும் என அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் சாலைகளில் செல்வோரே அதிகம். அவர்களை சில நேரங்களில் பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். சில நேரங்களில் முறைகேடுகளில் இறங்கி, விட்டு விடுகிறார்கள்.

இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் போட வேண்டும் என கட்டாயம் ஆக்கியுள்ளார்கள் சில மாநிலங்களில். ஆயினும் அதை பலரும் கடைப்பிடிப்பதில்லை,.

இந்நிலையில் தனது குழந்தைக்கும் சிறிய ஹெல்மெட் அணிவித்து, சாலையில் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த பெண்ணின் செயலைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போன உபி., மாநில போக்குவரத்து ஆய்வாளர் தியோரியா குழந்தைக்கும் தாய்க்கும் நடு சாலையில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை ராகுல் ஸ்ரீவத்ஸவ் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்தக் குழந்தைக்கு பள்ளியில் பரிசும் பாராட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories