ரூ.1 லட்சம் சம்பளத்தில் மின் பகிர்மான கழகத்தில் வேலை!

Published:

employment career opportunities - 2026
#image_title

பொதுத்துறை நிறுவனமான மின் பகிர்மான கழகமான பவர்கிரிடு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்பளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.CC/09/2024

பணி: Trainee Supervisor

மொத்த காலியிடங்கள்: 70

சம்பளம்: மாதம் ரூ.24,000 – 1,08,000

வயதுவரம்பு: 6.11.2024 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்(பவர்), பவர் சிஸ்டம், பவர் இன்ஜினியரிங் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் குறைந்தது 70 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை மூலம் படிப்பை முடித்தவர்கள், தொலைத்தூர் கல்வி முறையில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் விண்ணப்பத்தாரரின் தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு சென்னை, பெங்களூருவில் நடைபெறும். தேர்வு உத்தேசமாக 2025 ஜனவரியில் நடத்தப்படலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் www.powergrid.in என்ற இணையதளம் ஆன்லைன் மூலம் வரும் 6 ஆம் தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் எழுத்துத்தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு சாதாரண வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

Related articles

Recent articles

spot_img