December 6, 2025, 5:53 AM
24.9 C
Chennai

ஸ்ரீரங்கத்தில் பவித்ர உத்ஸவம்! இன்று பூச்சாண்டி சேவையில் நம்பெருமாள்!

sriranganathar - 2025

திருச்சி, திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலில் திரு பவித்ர உத்ஸவம் எனப்படும் நூலிழைத் திருநாள் திங்கள் கிழமை நேற்று தொடங்கியது.

திருவரங்கம் திருக்கோயில் வைணவர்களின் தலைமைக் கோயிலாக போற்றப் படுகிறது. பூலோக வைகுண்டம் என போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக் கோவிலில் ஆண்டுதோறும் பவித்ர உத்ஸவம் நேற்று தொடங்கியது. இதனை நூலிழைத் திருநாள் என்றும் அழைக்கின்றனர்.

ஒன்பது நாட்கள் நடைபெறும் பவித்ர உத்ஸவத்தின் போது, அனைத்து சந்நிதிகளிலும் உள்ள மூலவர் மற்றும் உத்ஸவ மூர்த்திகளுக்கு நூலிழைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதால் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான திரு பவித்ர உத்ஸவத்தின் தொடக்க நாளான நேற்று காலை 9.15க்கு திருவரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, யாகசாலை வந்தடைந்தார். அங்கு பரப்பி வைக்கப்பட்டிருந்த மலர்களுக்கு நடுவே நம் பெருமாள் எழுந்தருளினார்.

இரவு, 7 மணி அளவில் திருமஞ்சனம், அலங்காரம் கண்டருளிய நம்பெருமாள் இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

திருப்பவித்ர உத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நம்பெருமாள் பூச்சாண்டி சேவை சாதிப்பார். அப்போது நம்பெருமாளின் திருமேனி முழுவதும் நூலிழைகளை சுருள் சுருளாக வைத்து அலங்காரம் செய்வர்! இதனை பூச்சாண்டி சேவை என்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories