இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு.. அதான் பெரியவாளோட தேஜஸ்!

“இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு..ஆங்..அதான் பெரியவாளோட தேஜஸ்…தேஜஸ்!”

(மத்திய அமைச்சரின் புகழாரம்)

கட்டில்,மெத்தை,தலைகாணி மறுத்த சம்பவம்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

சிவாஸ்தானத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில் பெரியவாள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய தினம், டில்லியிலிருந்து ஓர் அமைச்சர்தரிசனத்துக்கு வந்தார்..

முதன் முதலாக ,வடநாட்டுத் துறவிகளின் ஆசிரமங்களை போல…காஞ்சி மடம்ஆசிரமமும் பெரிய பெரிய கட்டடங்கள் உள்ளதாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தார் போலும். சோபா, ஏர் கண்டிஷன்,கம்பளம்,டேபிள் என்றுகற்பனையோடு வந்திருந்தார்.

ஆனால் உலகம் போற்றும் பெரியவாள்,ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார்கள் .நாடு, மொழி, ஜாதி கடந்து உலகத்தோரால் தெய்வமாக மதிக்கப்படும் அவதார புருஷரா இவர்?

கட்டில் அருகில் வந்து வந்தனம் செய்ததும், அமைச்சரின் சந்தேகங்கள் விலவிட்டன.

பெரியவாளுடைய பார்வையின் ஈர்ப்பினால் வசீகரிக்கப்பட்டு மெய் மறந்தார். எட்டாவது உப்பரிகையில், பத்து கடோத்கஜர்கள் பணிவிடை செய்ய வெல்வெட் மெத்தையில் அலட்சியமாக உட்கார்ந்திருக்க வேண்டிய மகாத்மா,நீளக் காவித் துணியை அரைகுறையாக அணிந்து கொண்டு,கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தார்.

பெரியவாள், அமைச்சருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பின்னர் ஒரு சால்வையை போர்த்தி மரியாதை செய்யச் சொன்னார்கள். ஒரு மாம்பழத்தைப் பிரசாதமாகக் கொடுத்தார்கள்.

பெரியவாகிட்ட ஒரு விண்ணப்பம்..” -அமைச்சர்.

“என்ன?”-பெரியவாள்.

“நான் ஊருக்குப் போய் நல்ல மரக்கட்டில், மெத்தை, தலைகாணி அனுப்பி வைக்கிறேன் .பெரியவா தயவுசெய்து ஏற்றுக் கொண்டு உபயோகிக்கணும் …”

பெரியவாள் சொன்னார்கள்; “அடாடா..அப்படியெல்லாம் சிரமப்படாதீங்கோ ..அதெல்லாம் வேண்டாம்.கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொள்வதும்,உட்காருவதும் ரொம்ப சுகம்; ஈடு இணையே இல்லை. ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் படுத்துக் கொண்ட மாதிரி சுகமா இருக்கும்!”

வந்த அமைச்சருக்கு ஒரே ஏமாற்றம். ஒரு சிறு சேவை கூட செய்ய முடியவில்லையே என்று ஆதங்கம்.

“எளிமையாயிருக்கக் கூடிய காந்தி, வினோபா- வெல்லாம் பார்த்திருக்கேன். ஆனா, இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு.. ஆங்..அதான் பெரியவாளோட தேஜஸ்…தேஜஸ்!” பூரண திருப்தியுடன் திரும்பிச் சென்றார் மத்திய அமைச்சர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories