December 6, 2025, 2:28 AM
26 C
Chennai

கடனாளியாக வந்தவர் ஒரு பயனாளியாக திரும்பிச் சென்றார்!

“கடனாளியாக வந்தவர். ஒரு பயனாளியாகத்.திரும்பிச் சென்றார்.”

“நீ ஒரு தண்ணீர்ப் பந்தல் போடு. பக்தர்களுக்கெல்லாம், ‘சிவசிவ,ராம ராம’ன்னு சொல்லிண்டே “கடனைத் திருப்பிக் கொடுக்க முடியல்லே; தண்ணீர் கொடுக்கிறேன்” என்று சத்தமா சொல்லிண்டே – எல்லோருக்கும் தீர்த்தம் கொடு…உனக்கு நல்ல மனசு கடன்பட்ட பாவம் போயிடும்….”-பெரியவா.
.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

மூன்று நாள்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார் அவர். பெரியவாளிடம் தனிமையில் ஏதோ சொல்ல வேண்டும்.

பெரியவாள் மௌனம்.

நான்காம் நாள் மௌனத்தை விட்டுவிட்டுப் பேசத் தொடங்கினார்கள் பெரியவாள்

அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவர் ஓடோடி அருகில் வந்தார்.

“பெரியவாகிட்ட தனியா பேசணும்.ரெண்டே நிமிஷம்..”

“அதுக்காகத்தான் மூணுநாளா காத்திண்டிருந்தியோ?”

பக்தருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அது என்ன, அவ்வளவு கணக்காக மூன்றுநாள்? ரெண்டு-மூணு நாள் என்று சொல்லியிருக்கப்படாதோ?

“குடும்ப விஷயம்….ரகசியமாகப் பேசணும்…”

“என்னிடம் ரகசியமெல்லாம் வேண்டாம். இரைந்தே பேசு. மத்தவாளுக்கு தெரிஞ்சதாலே ஒண்ணும் குடிமுழுகிப் போய்விடாது…”

பக்தரின் முன்னோர்கள் செழிப்புடனும், செல்வாக்குடனும் இருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால், எப்படியோ தாங்கமுடியாத கஷ்டம், பொருள் நெருக்கடி வந்துவிட்டது தாத்தா காலத்தில் கடன் சுமையைத் தாங்க முடியாமல் போகவே, விளைநிலம் ஏலத்துக்குப் போயிற்று.

அப்படியும், கடன் கொடுத்தவர்களுக்கு முழுத் தொகையையும் செலுத்த முடியவில்லை .வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் பாவம் வந்து சேர்ந்து மனக்கஷ்டம் இரவு-பகலாய் துன்புறுத்துகிறது. என்னிடம் பணம் இல்லை. குடும்பத்தை நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. தாத்தா காலத்துக் கடன்களையெல்லாம் அடைத்து விட்டால்தான் நிம்மதியும் சௌகரியமும் உண்டாகும் போலிருக்கிறது.

“பெரியவாதான் வழி சொல்லணும்…”

சிறிதுநேரம், கண்களை மூடிக்கொண்டிருந்தார்கள் பெரியவா.

“கோடை காலத்திலே, பல க்ஷேத்திரங்களில் உற்சவம் நடக்கும். ரொம்ப ஜனங்கள் வருவா. எல்லாருக்கும் ரொம்ப தாகம் இருக்கும். நீ ஒரு தண்ணீர்ப் பந்தல் போடு. பக்தர்களுக்கெல்லாம், ‘சிவசிவ,ராம ராம’ன்னு சொல்லிண்டே “கடனைத் திருப்பிக் கொடுக்க முடியல்லே; தண்ணீர் கொடுக்கிறேன்” என்று சத்தமா சொல்லிண்டே – எல்லோருக்கும் தீர்த்தம் கொடு…உனக்கு நல்ல மனசு.. கடன்பட்ட பாவம் போயிடும்….”

விழுந்து விழுந்து சேவித்தார் பக்தர்.

கடனாளியாக வந்தவர். ஒரு பயனாளியாகத் திரும்பிச் சென்றார் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories