30-03-2023 2:20 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்பெண், பொன்: ஆச்சார்யாள் அருளுரை!

    To Read in other Indian Languages…

    பெண், பொன்: ஆச்சார்யாள் அருளுரை!

    உலகத்திலே மனிதனுக்கு இரண்டு விஷயங்களில் “மோஹம்” உண்டாகிறது. அவை “பெண்” மற்றும் “பொன்” என்பவையே. இந்த இரண்டிலும் மோஹமடைந்தவன் தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கின்றான்.

    எவனுக்கு இந்த இரண்டிலும் மோஹம் இல்லையோ அவனே “மஹாத்மா” எனப்படுகிறான்.

    இராவணன் சீதையைத் தவறான பார்வையில் பார்த்தான்; அழிந்து விட்டான். இதனால் என்ன தெரிகிறது என்றால், உலகத்தில் எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் பார்க்கக் கூடாது என்பதுதான்.

    நம்முடைய பாரதப் பண்பாட்டிலேகூட, “உலகிலுள்ள அனைத்துப் பெண்களும் தாயாருக்குச் சமானம் என்றுதான் கருதப்பட வேண்டும்” என்பதைத்தானே கூறியிருக்கிறார்கள்!

    ஒருவன் எப்படிப்பட்ட தீயவனாயினும் சரி, தன் தாயாரின் விஷயத்தில் எவ்விதக் கெட்ட எண்ணத்தோடும் இருக்க மாட்டான். எல்லாப் பெண்களையும் தாயாராக பாவித்தால் மனதிலே எவ்வித விகாரமும் ஏற்படாது.

    தேவீமாஹாத்மியத்திலே தேவதைகள் அந்த பரதேவதையைத் துதிக்கும்போது “ஸகல ஸ்த்ரீகளும் உன் ஸ்வரூபமே” என்று கூறுகிறார்கள். இதைப் பின்பற்றும் வண்ணமாகத்தான் நம்முடைய முன்னோர்களும் நமக்கு வழிமுறைகளை உபதேசித்திருக்கிறார்கள்.

    இதற்கு மாறாக நாம் நடந்தோமானால் அது மிகப் பெரும் தவறாகிவிடும்.
    பிறருடைய சொத்தை நாம் சிறிதும் விரும்பக் கூடாது. தெருவில் எவ்வளவோ கல்லும் மண்ணும் நிறைந்து கிடக்கின்றபோதிலும் எவருடைய மனதேனும் அவற்றை நாடுகின்றதா? இதே பாவனையைத்தான் நாம் பிறருடைய சொத்து விஷயத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த பாவனை எவனுக்கு இல்லையோ, எவன் பிறர் சொத்தை அபகரிக்க நினைக்கிறானோ அவனுக்கு துரியோதனனுடைய கதையே ஓர் எச்சரிக்கை!

    துரியோதனன் தனது சிற்றப்பாவின் பிள்ளைகளுக்கு முறைப்படிச் சேர வேண்டிய சொத்துக்களைக் கொடுக்காமல் தானே அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கப் பேராசைப்பட்டான்; விளைவை அனுபவித்தான்.

    பணக்காரனாக இருந்தால்தான் சந்தோஷம் என்பதில்லை. எப்படிப்பட்ட நிலையிலும் சுகமாக இருக்கலாம். இந்த தத்துவத்தை மறந்தோமானால் அதர்மங்களும் அநியாயங்களும் அதிகரிக்கும். மாறாக, “பொன்” னில் இருக்கும் மோஹத்தை நாம் நீக்கி விட்டோமானால் திருப்தியும் சந்தோஷமுமான ஜீவிதம் நமக்கு உண்டாகும்.

    ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    9 − three =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,034FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...