December 6, 2025, 9:11 PM
25.6 C
Chennai

கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் விடிய விடிய நிகழ்ந்த தூக்க நேர்ச்சை..

images 83 - 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ர காளியம்மன் கோயிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நேற்று நடந்தது. இரு வில்லில் 4 தூக்கக்காரர்கள் கையில் குழந்தைகளை ஏந்தி கோயிலை சுற்றி வலம் வந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் நேற்று 1,352 குழந்தைகைளுக்கான தூக்க நேர்ச்சை விடிய விடிய இன்று காலை வரை நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் கேரள எல்லையில் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர நாளில் தூக்கத்திருவிழா நடைபெறும். நடப்பாண்டு திருவிழா கடந்த 16-ம் தேதி தொடங்கியது.

966092 - 2025

இக்கோயிலில் விரதம் இருந்து அம்மனின் அருளால் பிள்ளைப்பேறு அடைந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செலுத்துவது வேறு எங்கும் காணமுடியாத நிகழ்வாகும். இக்கோயிலில் தூக்க வில் என்ற வண்டி உள்ளது. இந்தவண்டியில் உயரமான இரு தடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இவ்விரு தடிகளின் உச்சியில் தலா இருவர் தொங்கிக் கொள்ளும் வகையில் குறுக்குச் சட்டங்கள் இருக்கும். இச்சட்டங்களில் நான்கு பேரை முதுகுடன் சேர்த்து கட்டி சுமார் 40 அடி உயரத்தில் தொங்க விட்டிருப்பார்கள். இவர்கள் நான்கு பேரும் தலா ஒரு குழந்தையை கையில் பிடித்துக் கொள்வார்கள். இவர்களைத் தாங்கிய வண்டியை பக்தர்கள் கோயிலைச் சுற்றி இழுத்து வருவர். ஒருமுறை இந்த வண்டி வலம் வந்ததும், அதிலுள்ள நான்கு பேரும் இறங்கிக் கொள்ள, வேறு நான்கு பேர், வேறு நான்கு குழந்தைகளுடன் தொங்கியபடி வலம் வருவார்கள்.

இவ்வாறு நேர்ச்சை செலுத்துவதற்காக நடப்பாண்டு 1,352 குழந்தைகள் பதிவு செய்திருந்தனர். குழந்தைகளின் பெற்றோரும், குழந்தைகளை ஏந்தியபடி தூக்க வில் வண்டியில் தொங்கியபடி வலம் வரும் தூக்கக்காரர்களும் கோயிலிலேயே தங்கி கடும் விரதம் இருந்தனர். தூக்க நேர்ச்சைக்காக பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. நேற்று முன்தினம் மாலை தூக்க வில் வண்டியின் வெள்ளோட்டம் நடைபெற்றது.

தூக்க நேர்ச்சை நாளான நேற்று அதிகாலையில் அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார். உடனடியாக தூக்க நேர்ச்சை தொடங்கியது. முதலில் அம்மனுக்கான 4 தூக்க நேர்ச்சை நடைபெற்றது. அதன் பின்னர் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடந்தது. 1,352 குழந்தைகள் தலா 4 பேர் வீதம் கோயிலைச் சுற்றி வலம் வர வேண்டியது இருந்ததால், நேற்று அதிகாலை தொடங்கிய இந்நிகழ்ச்சி, நேற்று நள்ளிரவு முடிந்து விடிய விடிய நடந்தது.

குமரி மாவட்டம் , தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories