ஸ்ரீஅச்சுதா அனந்தா நாராயணா மாதவா கோவிந்தா விஷ்ணுவே மதுசூதனா திரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ஹிருஷீகேஷா பத்மநாபா தாமோதரா ஸ்ரீசுந்தர்ராஜா கள்ளழகா….. கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக மதுரை வைகையாற்றில் அழகர் இன்று இறங்கினார். வைகை ஆற்றில் இறங்கிய அழகரை கைகளில் தீபம் ஏந்தி ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர்.
அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்தால் வான் அதிர்ந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, வெள்ளை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.
தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்த கள்ளழகரை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.