“இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!”

“இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!”
 
(பெரியவாள் உரையின் நயத்தை ரசித்த அந்த அதிகாரியின் முகத்தில், வெண்ணெய்- இல்லை-விளக்கெண்ணெய் வழிந்தது)
18403116 1556446661067160 1497124748506696567 n 2 - 2026
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.
கல்வித் துறையில் பெரிய அதிகாரத்திலிருந்த
அன்பர் தரிசனத்துக்கு வந்தார். அடிக்கடி
ஸ்ரீமடத்துக்கு வருபவர்.
 
இந்தத் தடவை இரண்டு ஆங்கிலேய
மாணவர்களை அழைத்துக்கொண்டு
வந்திருந்தார். இங்கிலாந்திலிருந்து
மாணவர்கள் தன்னை நாடி வந்திருக்கிறார்கள்
என்பதால் உள்ளூர ஒரு பெருமிதம்.
 
தலைக்கு மேல் ஒரு சாண் ஏறிப்போயிற்று
அகந்தை.
 
“இவர்கள் லண்டனில் ரிஸர்ச் செய்து
கொண்டிருக்கிறார்கள்.பல சப்ஜெக்ட்களில்
புகுந்து விளையாடுகிறார்கள்…
இங்கிலீஷ்காரர்களே ரொம்ப புத்திசாலிகள்!
இவர்கள் ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப
இண்டலிஜெண்ட்! பி.எச்.டி.வாங்கியிருக்
கிறார்கள்…இங்கிலீஷில்தான் வருஷந்தோறும்
புதுப்புது சொற்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
புதிய புதிய விஞ்ஞானச் சொற்களைக்
கண்டுபிடிக்கிறார்கள். அதனால்தான் அந்த
பாஷை தேங்கிப் போய் பாசி பிடிக்காமல்
ப்யூராகவே இருந்திண்டிருக்கு…”
 
அன்பரின் ஆங்கிலத் தோத்திரம்
முடிவடைவதாக இல்லை.
 
மகாப் பெரியவரின் முன்னிலையில் பேசும்
போது ஓர் அடக்கம் வேண்டும்.ஆங்கிலத்தைப்
புகழ்வதில் தவறு இல்லை; ஆனால் தலைகால்
தெரியாமல் சொற்களைக் குவித்துக்கொண்டு
போகக்கூடாது.
 
அவர் மூச்சு விடுவதற்காக ஒரு விநாடி நேரம்
பேச்சை நிறுத்தியபோது பெரியவாள்
பேசத் தொடங்கினார்கள்.
 
“ஆமாம்…இங்கிலீஷ்காரன் ரொம்ப புத்திசாலி
தான்! நாம் பாலைத் தயிராக மாற்றுகிறோம்.
அது ஸ்வபாவ மாறுதல்.ஆனால் தயிரைப்
பாலாக மாற்றுவதில்லை. மாற்ற முடியாது.
அதனாலே, அக்ஞானிகளான நாம் அந்தமாதிரி
யெல்லாம் மூயற்சி பண்றதில்லே.
 
இங்கிலீஷ்காரன் புத்திசாலியோன்னோ…
“இதோ,நான் தயிரைப் பாலாக்கிக் காட்டறேன்”னான்!
Butter Milk-ன்னு ஒரு வார்த்தையைக் கண்டு
பிடிச்சுட்டான்! பார்த்தியா…எவ்வளவு சுலபமா
Butter-ஐ மில்க் ஆக்கிட்டான்! நாம் என்னவோ
அதை மோர் என்று சொல்கிறோம்.மில்க்ன்னு
சொல்றதில்லே…”
 
அருகில் இருந்தவர்கள் மென்மையாகச்
சிரித்தார்கள்.
 
ஆங்கிலேய மாணவர்கள், ‘பெரியவாள் என்ன
சொன்னார்கள்’என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
 
“மைகாட்! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்;
எ பெட்டர் (Better) ரிசர்ச்! என்று சொல்லி
பெரியவாள் உரையின் நயத்தை ரசித்தார்கள்.
 
அந்த அதிகாரியின் முகத்தில், வெண்ணெய்-
இல்லை-விளக்கெண்ணெய் வழிந்தது
ALSO READ:  பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories