“இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!”

“இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!”
 
(பெரியவாள் உரையின் நயத்தை ரசித்த அந்த அதிகாரியின் முகத்தில், வெண்ணெய்- இல்லை-விளக்கெண்ணெய் வழிந்தது)
18403116 1556446661067160 1497124748506696567 n 2 - 2026
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.
கல்வித் துறையில் பெரிய அதிகாரத்திலிருந்த
அன்பர் தரிசனத்துக்கு வந்தார். அடிக்கடி
ஸ்ரீமடத்துக்கு வருபவர்.
 
இந்தத் தடவை இரண்டு ஆங்கிலேய
மாணவர்களை அழைத்துக்கொண்டு
வந்திருந்தார். இங்கிலாந்திலிருந்து
மாணவர்கள் தன்னை நாடி வந்திருக்கிறார்கள்
என்பதால் உள்ளூர ஒரு பெருமிதம்.
 
தலைக்கு மேல் ஒரு சாண் ஏறிப்போயிற்று
அகந்தை.
 
“இவர்கள் லண்டனில் ரிஸர்ச் செய்து
கொண்டிருக்கிறார்கள்.பல சப்ஜெக்ட்களில்
புகுந்து விளையாடுகிறார்கள்…
இங்கிலீஷ்காரர்களே ரொம்ப புத்திசாலிகள்!
இவர்கள் ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப
இண்டலிஜெண்ட்! பி.எச்.டி.வாங்கியிருக்
கிறார்கள்…இங்கிலீஷில்தான் வருஷந்தோறும்
புதுப்புது சொற்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
புதிய புதிய விஞ்ஞானச் சொற்களைக்
கண்டுபிடிக்கிறார்கள். அதனால்தான் அந்த
பாஷை தேங்கிப் போய் பாசி பிடிக்காமல்
ப்யூராகவே இருந்திண்டிருக்கு…”
 
அன்பரின் ஆங்கிலத் தோத்திரம்
முடிவடைவதாக இல்லை.
 
மகாப் பெரியவரின் முன்னிலையில் பேசும்
போது ஓர் அடக்கம் வேண்டும்.ஆங்கிலத்தைப்
புகழ்வதில் தவறு இல்லை; ஆனால் தலைகால்
தெரியாமல் சொற்களைக் குவித்துக்கொண்டு
போகக்கூடாது.
 
அவர் மூச்சு விடுவதற்காக ஒரு விநாடி நேரம்
பேச்சை நிறுத்தியபோது பெரியவாள்
பேசத் தொடங்கினார்கள்.
 
“ஆமாம்…இங்கிலீஷ்காரன் ரொம்ப புத்திசாலி
தான்! நாம் பாலைத் தயிராக மாற்றுகிறோம்.
அது ஸ்வபாவ மாறுதல்.ஆனால் தயிரைப்
பாலாக மாற்றுவதில்லை. மாற்ற முடியாது.
அதனாலே, அக்ஞானிகளான நாம் அந்தமாதிரி
யெல்லாம் மூயற்சி பண்றதில்லே.
 
இங்கிலீஷ்காரன் புத்திசாலியோன்னோ…
“இதோ,நான் தயிரைப் பாலாக்கிக் காட்டறேன்”னான்!
Butter Milk-ன்னு ஒரு வார்த்தையைக் கண்டு
பிடிச்சுட்டான்! பார்த்தியா…எவ்வளவு சுலபமா
Butter-ஐ மில்க் ஆக்கிட்டான்! நாம் என்னவோ
அதை மோர் என்று சொல்கிறோம்.மில்க்ன்னு
சொல்றதில்லே…”
 
அருகில் இருந்தவர்கள் மென்மையாகச்
சிரித்தார்கள்.
 
ஆங்கிலேய மாணவர்கள், ‘பெரியவாள் என்ன
சொன்னார்கள்’என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
 
“மைகாட்! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்;
எ பெட்டர் (Better) ரிசர்ச்! என்று சொல்லி
பெரியவாள் உரையின் நயத்தை ரசித்தார்கள்.
 
அந்த அதிகாரியின் முகத்தில், வெண்ணெய்-
இல்லை-விளக்கெண்ணெய் வழிந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories