December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

“இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!”

“இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!”
 
(பெரியவாள் உரையின் நயத்தை ரசித்த அந்த அதிகாரியின் முகத்தில், வெண்ணெய்- இல்லை-விளக்கெண்ணெய் வழிந்தது)
18403116 1556446661067160 1497124748506696567 n 2 - 2025
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.
கல்வித் துறையில் பெரிய அதிகாரத்திலிருந்த
அன்பர் தரிசனத்துக்கு வந்தார். அடிக்கடி
ஸ்ரீமடத்துக்கு வருபவர்.
 
இந்தத் தடவை இரண்டு ஆங்கிலேய
மாணவர்களை அழைத்துக்கொண்டு
வந்திருந்தார். இங்கிலாந்திலிருந்து
மாணவர்கள் தன்னை நாடி வந்திருக்கிறார்கள்
என்பதால் உள்ளூர ஒரு பெருமிதம்.
 
தலைக்கு மேல் ஒரு சாண் ஏறிப்போயிற்று
அகந்தை.
 
“இவர்கள் லண்டனில் ரிஸர்ச் செய்து
கொண்டிருக்கிறார்கள்.பல சப்ஜெக்ட்களில்
புகுந்து விளையாடுகிறார்கள்…
இங்கிலீஷ்காரர்களே ரொம்ப புத்திசாலிகள்!
இவர்கள் ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப
இண்டலிஜெண்ட்! பி.எச்.டி.வாங்கியிருக்
கிறார்கள்…இங்கிலீஷில்தான் வருஷந்தோறும்
புதுப்புது சொற்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
புதிய புதிய விஞ்ஞானச் சொற்களைக்
கண்டுபிடிக்கிறார்கள். அதனால்தான் அந்த
பாஷை தேங்கிப் போய் பாசி பிடிக்காமல்
ப்யூராகவே இருந்திண்டிருக்கு…”
 
அன்பரின் ஆங்கிலத் தோத்திரம்
முடிவடைவதாக இல்லை.
 
மகாப் பெரியவரின் முன்னிலையில் பேசும்
போது ஓர் அடக்கம் வேண்டும்.ஆங்கிலத்தைப்
புகழ்வதில் தவறு இல்லை; ஆனால் தலைகால்
தெரியாமல் சொற்களைக் குவித்துக்கொண்டு
போகக்கூடாது.
 
அவர் மூச்சு விடுவதற்காக ஒரு விநாடி நேரம்
பேச்சை நிறுத்தியபோது பெரியவாள்
பேசத் தொடங்கினார்கள்.
 
“ஆமாம்…இங்கிலீஷ்காரன் ரொம்ப புத்திசாலி
தான்! நாம் பாலைத் தயிராக மாற்றுகிறோம்.
அது ஸ்வபாவ மாறுதல்.ஆனால் தயிரைப்
பாலாக மாற்றுவதில்லை. மாற்ற முடியாது.
அதனாலே, அக்ஞானிகளான நாம் அந்தமாதிரி
யெல்லாம் மூயற்சி பண்றதில்லே.
 
இங்கிலீஷ்காரன் புத்திசாலியோன்னோ…
“இதோ,நான் தயிரைப் பாலாக்கிக் காட்டறேன்”னான்!
Butter Milk-ன்னு ஒரு வார்த்தையைக் கண்டு
பிடிச்சுட்டான்! பார்த்தியா…எவ்வளவு சுலபமா
Butter-ஐ மில்க் ஆக்கிட்டான்! நாம் என்னவோ
அதை மோர் என்று சொல்கிறோம்.மில்க்ன்னு
சொல்றதில்லே…”
 
அருகில் இருந்தவர்கள் மென்மையாகச்
சிரித்தார்கள்.
 
ஆங்கிலேய மாணவர்கள், ‘பெரியவாள் என்ன
சொன்னார்கள்’என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
 
“மைகாட்! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்;
எ பெட்டர் (Better) ரிசர்ச்! என்று சொல்லி
பெரியவாள் உரையின் நயத்தை ரசித்தார்கள்.
 
அந்த அதிகாரியின் முகத்தில், வெண்ணெய்-
இல்லை-விளக்கெண்ணெய் வழிந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories