“பையனின் கோத்திரம் – சூத்திரம் தெரியல்லே…”

“பையனின் கோத்திரம் – சூத்திரம் தெரியல்லே…”

“கோத்திரம் தெரியாதவர்களுக்கு, காசியப கோத்திரம்; ஸூத்திரம்தெரியாதவர்களுக்கு, போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன்-பெரியவா

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-182
தட்டச்சு-வரகூரான் நாராயணன்2a2e8509fd23bfc926c95dc57ee8f945 - 2026
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

திருச்சி ரயில்வே அலுவலத்தில் பணி,
இரண்டு பையன்கள்,ஒரு பெண்.

மகா சுவாமிகளிடம் அபார பக்தி.

பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறை,குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம் இல்லை. ஒரிரு நாள்கள் தங்கி, பெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து
விட்டுத்தான் போவார்.

“இந்தப் பையனுக்கு ஒன்பது வயசாயிடுத்து.
உபநயனம் நடத்தணும்” என்று பெரியவாளிடம்
விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை.

“செய்யேன்…”-பெரியவா

“பையனின் கோத்திரம் – சூத்திரம் தெரியல்லே…”

பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்.

“உன்னோட பையன்தானே?”

“இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே
தகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இரண்டு
மாதக் குழந்தையை விட்டுவிட்டுத் தாயாரும் போய்ச் சேர்ந்து விட்டாள்.கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்? நாங்கள் குழந்தையை எடுத்துண்டு வந்தோம். ஊர்,பெயர், பந்து ஜனங்கள் தெரியலை.திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி…”

பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை.
அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம்,
“பாரு..ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து, வளர்த்து,பூணல் போடப் போறார்! என்ன மனஸ் இவருக்கு.”

கண்ணன் சொன்னார்; “அவரோட சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும் நினைத்துக் கொண்டிருக்கோம்.

பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக்கொண்டு
சொன்னார்கள்;

“கோத்திரம் தெரியாதவர்களுக்கு, காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு ,போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன். அது மாதிரி சொல்லிப்
பூணூல் போடு. ஆனா குழந்தையை அந்நியமா
நினைச்ச்டாதே. உன் பையன்தான்.”

பிரசாதம் பெற்றுக் கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories