“உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?”

“உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?”
 
(‘சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் பக்தி என்னும் பயிரை விதைக்க வேண்டும்’ என்று பெரியவாளின் விளக்கம்)
 
ஜூன் 02,2018 -தினமலர்.1391799 656538261058009 260030728 n - 2026
 
‘சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் பக்தி என்னும் பயிரை விதைக்க வேண்டும்’ என்று மகாபெரியவர் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம். ஒருமுறை பக்தர் ஒருவர், “சுவாமி! ழந்தைகளுக்கு பக்தியில் நாட்டம் வருவதில்லையே…. காலம் போகப் போகத்தான் பக்தியின் ருசி புரிய தொடங்கும். வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்கும். அதுவரை பொறுமையுடன் இருக்கத்தானே வேண்டும்? வலுக் கட்டாயமாக பக்திப்பயிரை விதைத்தால் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார். சுவாமிகள் கனிவுடன், “உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?” என்று கேட்டார். அவர், “தினமும் தயிர்ப்பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவார்களே..” என்றார். “எந்த வேளையில் கடைவார்கள்…. காலையிலா, மத்தியானமா?”“அதிகாலையில் தான் சுவாமி…”“மத்தியானம் அல்லது சாயந்திரம் கடைவதில்லையே ஏன்?” பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர். “அதிகாலை சுபமான வேளை. அந்நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருக்கும். அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும். உருகாமல் கெட்டியாகவும் இருக்கும். சூரியன் வானில் உக்கிரமாகி விட்டால் போச்சு. வெண்ணெய் திரளாமல், கடையக் கடைய உருகி விடும்.
 
அதுபோல, வயதான காலத்தில் மனதில் பல சிந்தனைகளும் அலைமோதும். அப்போது பக்தி என்னும் வெண்ணெய் திரள்வது கடினம். குழந்தைகளின் மனம் குளிர்ச்சியானது. அதில் காம, குரோத சிந்தனை இருக்காது. அப்போது கடவுள் சிந்தனை என்னும் மத்தால் கடைய, பக்தி என்னும் வெண்ணெய் சுலபமாகத் திரளும். இதனால், பெற்றோர் வாரம் ஒருமுறையாவது குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த பழக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும். துன்பம் வந்தாலும் கடவுள் அருளால் அது நம்மை பாதிக்காது என்ற சிந்தனை உருவாகும். அதனால் பக்திக்கு ஏற்ற வயது இளமைப் பருவம் தான். புரிகிறதா?” என்றார்.
ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 1 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories