கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம்
தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள்கலந்துகொண்டு வழிபாடு செய்தனர் சுவாதி ,மற்றும் திருவோண நட்சத்திர நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது மேலும் தடைபெற்ற காரியங்கள் நடைபெற பக்தர்கள் இங்குவந்து வழிபாடு செய்துவருகின்றனர்
மாலை16 வகைகயான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம்,விஷ்ணு சூக்தஹோமம்,மகாலட்சுமி ஹோமம் மற்றும் 1 2 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேங்களும் நடைபெற்றன தொடர்ந்து பெருமாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ புஷ்கரணியையும் ( திருக்கோவிலையும் தெப்பக் குளத்தையும்) திருக்கோவிலையும் ராம பஜனை பாடி தீர்த்தவலம் வந்தனர்
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் ,ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் ,பொதுமக்களும் செய்திருந்தனர்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம்
Popular Categories



