ஸாமீ! எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ!

ஸாமீ! எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ!

அப்போது நம்முடைய ஸ்ரீமடம் கும்பகோணத்தில் இருந்த ஸமயம் ! ஒருநாள் ஸ்ரீ சந்த்ரமௌலீஶ்வர பூஜை முடிந்து, தீர்த்த ப்ரஸாதம் குடுத்துவிட்டு, சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் நம் பெரியவா.

“ஸாமீ!….தெய்வமே!…..எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ !…”

திடீரென்று ஒரு குடியானவ பக்தர் அலறிக் கொண்டே பெரியவாளிடம் ஓடிவந்து, பாதங்களில் விழுந்து அழுதார்!

“என்னப்பா?…என்னாச்சு?…..”

“ஸாமீ ! எனக்கு ஒரே ஒரு மவன்….கறியாப்பில [கறிவேப்பிலை] கொத்தாட்டம்! வயல்ல ஸாப்பாடு ஸாப்ட்டுகிட்டு இருந்தான் ஸாமீ! அவனை பாம்பு கடிச்சிருச்சு ஸாமீ !……”

“ஸெரியா சொல்லு…..பாம்பு கடிச்சுதா?…..”

“மயக்கம் போட்டு விளுந்துட்டான் ஸாமீ! பாம்புக் கடிக்கி, மந்திரிக்கிறவங்க யாருமே இங்க இல்லீங்க ஸாமீ! காப்பாத்துங்க தெய்வமே!…”

பெரியவா எதுவும் பேசாமல், அவருடைய கையில் விபூதியைப் போட்டார்.

“பையனோட நெத்தில பூசு…..”

“ஸெரிங்க….”

“வீட்டுல அரப்பு, சீயக்கா பொடி இருக்கா?…”

“இருக்குங்க ஸாமீ !……”

“பையனோட ஒதட்டை பிரிச்சு, அவனோட வாய்ல, அரப்பு பொடியை தடவு! அவன் கசக்கறது-ன்னு துப்பினா….பாம்பு கடிக்கலேன்னு அர்த்தம்; திதிக்கறது-ன்னு சொன்னா….பாம்பு கடிச்சிருக்குன்னு அர்த்தம்; அதுக்கான வைத்யம் பண்ணணும்….”

“கடவுளே! எம்மவன் பொளைப்பானா?…”

“மொதல்ல போய் அரப்பு பொடிய குடு…..”

குடியானவர் ஓடிப்போய், பையனின் வாயில் அரப்புப் பொடியை தடவினார்……

“ஐயே!….கசக்குதுப்பா…..!..”

துப்பினான்!

அப்பாக்காரருக்கு பெரிய நிம்மதி!

“பாம்பு கடிக்கலடா…!….ஸாமீ காப்பாத்திட்டாரு…”

உடனே பையன் நெற்றியில் பெரியவா குடுத்த விபூதியைப் பூசிவிட்டு, அன்று மாலையே, மனைவியையும், மகனையும் பெரியவாளை தர்ஶனம் பண்ண அழைத்துக் கொண்டு வந்தார்.

“இவனை பாம்பு கடிக்கல….பயப்டாதே! மேல ஏறி ஊர்ந்து போயிருக்கு! அவ்ளோதான்….பயத்ல மயக்கம் போட்டு விழுந்துட்டான்!….வீட்ல, தெனோமும் நல்லெண்ணெய் விட்டு, வெளக்கு ஏத்தி வை!…”

பையனின் அம்மாவிடம் சொன்னார்.

பாம்பு கடித்திருக்கிறதா? இல்லையா? என்பதை சுளுவாக, ஊர்ஜிதப்படுத்தப்படுத்திக் கொள்ள, என்ன ஒரு ஸிம்பிளான test! இந்தக் காலத்தில், shampoo-வை வாயில் விட்டு test பண்ண முடியுமா? அப்படிப் பண்ணினால், பாம்பு நிஜமாகவே கடித்திருக்காவிட்டால் கூட, கடித்த மாதிரி நுரை வந்து இன்னும் பயமுறுத்தும்.

நல்லபாம்பு நிறைய நடமாடும் இடத்தில், நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால், பாம்பு எதுவும் செய்யாது என்பதை பலமுறை பெரியவா சொல்லியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories