நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-  திருநெடுந்தாண்டகம்

srirangam-namperumal.jpeg

srirangam-namperumal.jpeg

நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-
திருநெடுந்தாண்டகம் 14/12

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் என்ற விழாவாக, அன்று மாலை திருமங்கை ஆழ்வாரின் முப்பது பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்ற பிரபந்தம் சந்தனு மண்டபத்தில் அரையர் ஸ்வாமிகளால் தாளத்துடன் சேவிப்பர்!

தாண்டகம் என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும் ஒரு ஊன்றுகோல். மனித ஆன்மாவின் கடைத்தேற்றக்கு பெரியபெருமாளே ஊன்றுகோல் என்பதை ஆழ்வார் இந்த பிரபந்தத்தில் விளக்குகிறார்!

மேல்நாட்டு வேதாந்தியை (நஞ்சீயர்) வாதத்தில் வென்று, அவரை திருத்திப்பணி கொண்டு திரும்பிய தம் திவ்ய குமாரர் பராசர பட்டரிடம், வேதாந்தியை எப்படி வென்றீர் எனக்கேட்க, பட்டர் திருநெடுந்தாண்டகம் பாசுரங்களில் உள்ள ப்ரமாணங்களைக் கொண்டு வென்றதாக விண்ணப்பித்து தம்முடைய வாதங்களையும் சமர்ப்பித்தார் பெரியபெருமாளிடம்!

இந்த வைபவத்தையே நம்பெருமாள் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் திருநாளாக அன்வயிக்கிறார்!

மற்ற திவ்யதேசங்களில் திருஅத்யயன உற்சவம் அமாவாஸ்யைக்கு அடுத்த பிரதமையன்று திருப்பல்லாண்டுடன் தொடங்குவர். ஶ்ரீரங்கத்தில் மட்டும் ஒருநாள் முன்னரே, அமாவாஸ்யையன்று “திருநெடுந்தாண்டகத்துடன்” *தொடங்குவர் – ஶ்ரீபராசர பட்டரின் பெருமையைக் கொண்டாடும் விதமாக!!

“மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்;
விளக்கொளியாய், முளைத்தெழுந்த திங்கள் தானாய்;
பின்னுருவாய், முன்னுருவிற் பிணி மூப்பில்லாப்,
பிறப்பிலியாய், இறப்பதற்கே எண்ணாது எண்ணும்;
பொன்னுருவாய், மணியுருவில் பூதமைந்தாய்ப்,
புனலுருவாய், அனலுருவில் திகழுஞ்சோதி;
தன்னுருவாய், என்னுருவில் நின்ற எந்தை,
தளிர்புரையும் திருவடி என் தலைமேலவே!”

-திருநெடுந்தாண்டகம் (முதல் பாசுரம்)

தேக ஆத்மா அபிமானத்தைப் போக்கி, நான்கு வேதங்களையும் தந்து, அஞ்ஞானத்தை அகற்றி, ஜ்ஞான விளக்கேற்றி, நீர்மை குணத்தோடு ஸர்வ சுலபனான எம்பெருமான் என்னுள்ளத்தில் எழுந்தருளி, தம் குளிர்ந்த திருவடிகளை என் சென்னியில் சாற்றினான்!


Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories