December 6, 2025, 1:24 AM
26 C
Chennai

நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-  திருநெடுந்தாண்டகம்

srirangam-namperumal.jpeg

srirangam-namperumal.jpeg

நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-
திருநெடுந்தாண்டகம் 14/12

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் என்ற விழாவாக, அன்று மாலை திருமங்கை ஆழ்வாரின் முப்பது பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்ற பிரபந்தம் சந்தனு மண்டபத்தில் அரையர் ஸ்வாமிகளால் தாளத்துடன் சேவிப்பர்!

தாண்டகம் என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும் ஒரு ஊன்றுகோல். மனித ஆன்மாவின் கடைத்தேற்றக்கு பெரியபெருமாளே ஊன்றுகோல் என்பதை ஆழ்வார் இந்த பிரபந்தத்தில் விளக்குகிறார்!

மேல்நாட்டு வேதாந்தியை (நஞ்சீயர்) வாதத்தில் வென்று, அவரை திருத்திப்பணி கொண்டு திரும்பிய தம் திவ்ய குமாரர் பராசர பட்டரிடம், வேதாந்தியை எப்படி வென்றீர் எனக்கேட்க, பட்டர் திருநெடுந்தாண்டகம் பாசுரங்களில் உள்ள ப்ரமாணங்களைக் கொண்டு வென்றதாக விண்ணப்பித்து தம்முடைய வாதங்களையும் சமர்ப்பித்தார் பெரியபெருமாளிடம்!

இந்த வைபவத்தையே நம்பெருமாள் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் திருநாளாக அன்வயிக்கிறார்!

மற்ற திவ்யதேசங்களில் திருஅத்யயன உற்சவம் அமாவாஸ்யைக்கு அடுத்த பிரதமையன்று திருப்பல்லாண்டுடன் தொடங்குவர். ஶ்ரீரங்கத்தில் மட்டும் ஒருநாள் முன்னரே, அமாவாஸ்யையன்று “திருநெடுந்தாண்டகத்துடன்” *தொடங்குவர் – ஶ்ரீபராசர பட்டரின் பெருமையைக் கொண்டாடும் விதமாக!!

“மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்;
விளக்கொளியாய், முளைத்தெழுந்த திங்கள் தானாய்;
பின்னுருவாய், முன்னுருவிற் பிணி மூப்பில்லாப்,
பிறப்பிலியாய், இறப்பதற்கே எண்ணாது எண்ணும்;
பொன்னுருவாய், மணியுருவில் பூதமைந்தாய்ப்,
புனலுருவாய், அனலுருவில் திகழுஞ்சோதி;
தன்னுருவாய், என்னுருவில் நின்ற எந்தை,
தளிர்புரையும் திருவடி என் தலைமேலவே!”

-திருநெடுந்தாண்டகம் (முதல் பாசுரம்)

தேக ஆத்மா அபிமானத்தைப் போக்கி, நான்கு வேதங்களையும் தந்து, அஞ்ஞானத்தை அகற்றி, ஜ்ஞான விளக்கேற்றி, நீர்மை குணத்தோடு ஸர்வ சுலபனான எம்பெருமான் என்னுள்ளத்தில் எழுந்தருளி, தம் குளிர்ந்த திருவடிகளை என் சென்னியில் சாற்றினான்!


Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories