திருப்புகழ் கதைகள்: ‘அருக்கு மங்கையர்’!

thirupugazhkathaikal 1
thirupugazhkathaikal 1

திருப்புகழ் கதைகள் பகுதி 17
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –


பாடல் 7 – திருப்பங்குன்றம் தலத்து ‘அருக்கு மங்கையர்’
எனத் தொடங்கும் பாடல்

தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன …… தனதான

(அருக்கு மங்கையர் எனத் தொடங்குவதில்… ஐந்தாம் பத்தியில் இருந்து…)

இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
     உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
     இதத்த இங்கிதம் இலகிய அறுமுக …… எழில்வேளென்

றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
     விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
     இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை …… புனைவோனே

செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
     நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
     திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய …… குருநாதர்

திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
     குருக்க ளின்திற மெனவரு பெரியவ
     திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.

இத்திருப்புகழின் முதல் நான்கு பத்திகளில் சிற்றின்பச் சுவை சற்றே அதிகம். அடுத்து, (1) இருக்கு வேதமுதன் மொழியை முனிவர்களுக்கு உபதேசித்த கதை (2) முருகன் இலக்கணம் சொன்ன கதை (3) சிதம்பர நடன வரலாறு (4) மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த கதை என உள்ளன. இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

இருக்கு வேத முதன் மொழியை முனிவர்களுக்கு உபதேசித்த கதை

இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற
     உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
     இதத்த இங்கிதம் இலகிய அறுமுக …… எழில் வேளென்

பொருள் – இருக்கு வேதத்தில் முதன்மொழியாம் தனி மந்திரத்தின் பொருளை அகத்தியர் முதலிய ஏழு முனிவர்களுக்கும் உபதேசித் தருளிய மகிழ்ச்சியை உடையவரே, சரவணப் பொய்கையில் தோன்றினவரே, குக மூர்த்தியே, இனிமையை உடையவரே, இன்பம் விளங்குகின்ற ஆறுமுகங்களை உடையவரே

விளக்கம் – இருக்கு வேதத்தில் முதன்முதலில் ஆரம்பிக்கப்படுவது குடிலையே. குடிலை என்றால் குண்டலினி சக்தி. மகாகவி பாரதியார் சொன்னது போலே “வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்

இந்த மூச்சுப் பயிற்சியே குண்டலினி. அப்போது எழும் நாதம் ஓம் எனும் நாதம். மோட்ச நிலையடைந்து உய்ய விரும்பும் தேவதைகளும், ஞானிகளும் சாதனை செய்வதற்கு நற்கருவியாய் நிற்பது இந்த ஓங்காரப் பிரணவமே ஆகும் எனப்படும்.

எல்லா மந்திரங்களிலும் சிறந்தது இந்தப் பிரணவமே. இந்த ஓங்காரம் இல்லையாயின் தேவாதி மந்திரங்கள் இயக்கமின்றி சடமாகின்றன. அனைத்து வேதங்களுக்கும் இதிகாச புராணங்களுக்கும் மூலாதாரமாக முதன்மையாய் நின்று ஒலிப்பது இந்த ஓம் எனும் பிரணவ மந்திரமே யாகும்.

இனி ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் சிறப்பை அடுத்த பகுதியில் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories