ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருவத்யயனம்!

manavalamanunigal sannidhi srirangam - 2026

மாமுனிகள் திருவத்யயனம்

-> பிள்ளைலோகம் இராமானுசன்

சிஷ்யனானவன் ஆச்சார்யனுடைய ஜென்ம தினம் மற்றும் அவர் ஆசார்யன் திருவடி அடைந்த நாளை கொண்டாடவேண்டும்.

ஆச்சார்யனுடைய ஜென்ம தினம் “திருநக்ஷத்திரம்” எனப்படும் ,ஆசார்யன் திருவடியடைந்த நாள், ஸ்ரீ வைஷ்ணவர்களால், திருவத்யயநம் (தீர்த்தம்) எனப்படும்.

நம்மாழ்வார் தொடங்கி திருவாய்மொழிப்பிள்ளை வரை உள்ள ஆச்சார்யர்களுக்கு நேரே தொடங்கி, ஓராண்வழி ஆச்சார்யர்களுக்கும், மற்றுள்ள ஆச்சார்களுக்கும் அவர்களிடத்தில் நேரே சிஷ்யராக அடைந்தவர்கள் இந்நிலவுலகில் தற்போது இல்லை, அதலால் அவர்களது திரு நக்ஷ்த்திரம் கொண்டாப்படுகிறதே தவிர அவர்களது தீர்த்தம் கொண்டாப்படுவதில்லை.

ஆனால் ஸ்வாமி மணவாளமாமுனிகள் மட்டும் விதிவிலக்கு! அதிலும் கோயில் மணவாளமாமுனிகளின் சன்னதியில் மட்டும் கொண்டாப்படுகிறது. மற்ற திவ்யதேசங்களில் மணவாளமாமுனிகளுக்கு சன்னதி இல்லாமல் இல்லை, அதிலும் கோயில் மணவாள மாமுனிகளுக்கு மட்டுமே தீர்த்தம் கொண்டப்படுகிறது, அதற்கு காரணம்;

நம்பெருமாள் மணவாளமாமுனிகளை ஆச்சாரியனாய் கொண்டு ஒரு வருட காலம் தான் ஸிஷ்யனாய் திருவாய்மொழியின் ஈடு அர்த்தத்தை செவிசாய்த்தான், மேலும் சாற்றுமுறை தினத்தன்று, சிறிய பாலகனாய் அவர் முன் தோன்றி “ஸ்ரீ சைலேச” என்ற தனியனை அருளிச்செய்தார் என்பது ஜகத் ப்ரசித்தம். அது முதற்கொண்டே மாமுனிகளின் திருநக்ஷத்திரத்திற்கு அநேக பகுமானங்கள் நம்பெருமாள் சன்னதியில் இருந்து அனுப்பப்படுகிறது.

மணவாள மாமுனிகள் தன் ஆசாரிய திருவடியை அடைந்த நாள் மாசி , கிருஷ்ணபக்ஷ துவாதசி (16-2-1444, திருவோணம், ஞாயிற்றுக்கிழமை). ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை மணவாள மாமுனிகளின் திருவத்யயன உற்சவமாக தெற்கு உத்தர வீதியில் உள்ள ஸ்ரீமணவாளமாமுனிகள் சன்னதியில் நடைபெறுகிறது. திருநக்ஷத்திரத்தை போலவே மாமுனிகளின் தீர்த்தத்திற்கும் அநேக பகுமானங்கள், பெரிய பெருமாள் சன்னதியில் இருந்து அனுப்பப்படுகிறது.

மாமுனிகள் பரமபதித்தபோது பெரியபெருமாள் அவருக்கு சிஷ்யனாய் இருந்தமை தோற்ற பிரதி வருடமும் மாமுனிகள் தீர்த்தமும் கொண்டப்படவேண்டும் என்று நியமித்தாராம். மாமுனிகளிடத்தில் சிஷ்யராக ஆச்ரயித்த நம்பெருமாள் இன்றைக்கும் ஏழுந்தருளியிருப்பதால், ஸ்ரீரங்கத்தில் மட்டும் மாமுனிகளின் தீர்த்தம் கொண்டப்படுகிறது.

மாசி கிருஷ்ணபக்ஷ துவாதசி திதியன்று பெரியவசரத் தளிகை பெரியகோவில் அர்ச்சகர்களால் மாமுனிகளின் ஸந்நிதி சென்று கண்டருளப்படுகின்றது.அன்றைய தினம் தம்முடைய ஆச்சார்யனின் தீர்த்த தினமாகையினாலே அரங்கன் சந்தனம் சாற்றிக் கொள்வதில்லை.தாம்பூலமும் தரிப்பதில்லை.

திருவத்யயன கோஷ்டி, ஏகாதசி தினம் தொடங்கி, மறுநாள் துவாதசி தினம் அன்றைய தினம் திருவாய்மொழி கோஷ்டி முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories