விநாயக புராணம் எங்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது?

vinayaka chaturti pooja - 2026

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்

புராணம் என்றால் பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்று அர்த்தம். புராணம் என்கிற சமஸ்கிருத வார்த்தை புரா நவ என்கிற இரு வேர்களில் இருந்து பிறந்தது என்பர்.

மணிமேகலையில் சமயக் கணக்கர் தாம் திறம் கேட்ட காதையில் வைணவ வாதியை குறிப்பிடும்போது “காதல் கொண்டு கடல்வாணன் புராணம் ஓதினான்” ‌ என்கிற பாடல் வரி வருகிறது… எனவே புராணம் என்கிற பதம் தமிழில் மணிமேகலை பிறந்த காலத்தே வழக்கில் இருந்தது என்பதை அறிய முடிகிறது…..

தமிழில் இயற்றப்பட்ட புராணங்கள் பலவாகும். புராணங்களில் சிறப்புடன் பேசப்படுபவை கந்தபுராணம் காஞ்சி புராணம் பெரியபுராணம் திருவிளையாடல் புராணம் விநாயக புராணம் ஆகியவை.

பெரிய புராணத்தை எழுதியவர் சேக்கிழார் என்பது நமக்குத் தெரியும். கந்த புராணத்தை எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார் ஆவார். கந்த புராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

முருகப்பெருமான் திகடச்சக்கரச் செம்முகம் ஐந்துளான்… என முதல் அடியை எடுத்துக் கொடுக்க கந்தபுராணத்தைப் பாடி முடித்தார் கச்சியப்ப சிவாச்சாரியார். காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோவிலில் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

விநாயகப் பெருமானுக்கு புராணம் பாடியவர் கச்சியப்ப முனிவர்.

கச்சியப்பாசிவாச்சாரியார், கச்சி யப்ப முனிவர் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். சிலர் தவறுதலாக இருவரும் ஒருவரே என எண்ணுகின்றனர்.

கச்சியப்ப சிவாச்சாரியார் காஞ்சிபுரம் காளத்தியப்ப சிவாச்சாரியாரின் திருமகன் ஆவார். கச்சியப்ப முனிவர் திருத்தணியில் தோன்றியவர். அபிஷிக்தர் மரபில் வந்தவர். திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக இருந்த ஸ்ரீபின்வேலப்ப தேசிகரிடம் சமய தீட்சைகளைப் பெற்று ஆதீன அடியவர் கூட்டத்துடன் அங்கேயே இருந்து பெரும் புலவராய் திகழ்ந்தவர்.

திருவாவடுதுறை ஆதீனத்தால் குலதெய்வம் என்று பெரிதும் போற்றப்படும் மாதவ சிவ ஞான முனிவரின் முதன்மை மாணாக்கராக திகழ்ந்தார் கச்சியப்ப முனிவர். ஸ்ரீ மாதவ சிவஞான சுவாமிகள் மெய்கண்டார் அருளிய சிவ ஞான போதத்திற்கு மகா பாஷ்யம் செய்தவர்.

மாதவ சிவஞான சுவாமிகள் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்த பொழுது பாடியது காஞ்சிபுராணம்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 05 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

காஞ்சிபுரத்தில் இருந்து சிறிது காலம் சென்னையில் உள்ள குளத்தூரில் தங்கியிருந்தார். இவருடன் கச்சியப்ப முனிவரும் குளத்தூருக்கு வந்திருந்தார்.

குளத்தூர் பிரைட்டன் கந்தசாமி முதலியார் விநாயகர் மீது ஒரு புராணம் பாடும்படி கேட்டுக் கொண்டார். லீலா காண்டம் உபாசனா காண்டம் என்னும் இரு காண்டங்களையும் உள்ளடக்கி 6 ஆயிரம் பாடல்களுக்கு மேலாக உள்ள விநாயக புராணத்தை கச்சி யப்ப முனிவர் பாடினார்.

இந்த விநாயகர் புராணத்தை பிரைட்டன் கந்தசாமி முதலியார் தன்னுடைய கோவிலான பார்க் டவுன் பிரசன்ன விநாயகர் கோவிலில் வைத்து அரங்கேற்றம் செய்தார். சென்னையில் பார்க்க டவுன் பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பது எத்தனை சென்னைவாசிகளுக்குத் தெரியும்?

எல்லோருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Entertainment News

Popular Categories