spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்தனயன் வழியில் தந்தைக்கு தன யோகம்! ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

தனயன் வழியில் தந்தைக்கு தன யோகம்! ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

- Advertisement -

Navagraha astro

பிள்ளைகள் மூலம் தனயோகம், (அல்லது) புத்ர மூலதனயோகம் …

நல்ல தந்தை அமைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். நல்ல மனைவி மக்கள் அமையவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் மூலம் தனயோகம் அடைய முடியும்.

எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர்களைக் கவனியாமல் எப்படியோ போகட்டு மென்று விட்டு விடுகின்றார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளிருந்தும் கஷ்டப்படுவதை நடைமுறையில் பார்க்கிறோம் பார்த்துக் கொண்டும் இருக்கின்றோம்.

குழந்தை பிறந்ததும் குடும்பத்துக்கே யோகம் உண்டாவதும் உண்டு. இக்குழந்தையால் குடும்பத்திற்கு யோகம் உண்டா? என  அனைவரும்  ஜோதிடர்களை அணுகிக் கேட்டும் வருகிறார்கள். என்ன செய்வது யோகமுள்ள குழந்தை பிறக்கவும் ஜாதகத்தில் யோகம் இருக்க வேண்டும் அல்லவா?

ஆகா ! இந்தக் குழந்தை பிறந்ததும் அவன் தந்தை அமோகமாக உயர்ந்த நிலை அடைந்து விட்டான் என சிலர் மூக்கு மேல் விரல் வைத்தும் கூறுவதும் உண்டு.

இந்தக் குழந்தை பிறந்ததும் அவன் தந்தை சொத்து சுகத்தையெல்லாம் இழந்து அனைத்தும் நாசமாக்கி விட்டது என்று சிலர் வருத்தப் படுவதையும் நாம் பார்க்கிறோம்.

அது குழந்தையின் பாக்கியமோ, துர்பாக்கியமோ என்றாலும் கூட இரண்டு நிலையுமே தகப்பன் ஜாதகத்திலும் பிரதிபலிக்கும்  என்பதை மறந்து குழந்தையின் மீது பழி சுமத்தி விடக் கூடாது.

குழந்தை பிறந்ததும் சில நேரம் தந்தை யோகக்காரர் ஆகி விடவும் வாய்ப்பு உண்டு. சில நேரம் ஆண்டியாக்கி விடவும் கூடும்.

நல்ல குழந்தை பெற தகப்பன் ஜாதகத்திலும் யோக பலம் இருக்க வேண்டியது அவசியம் தான்.

ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்து அதிபதியானவர் 5ம் இடத்து அதிபதியுடனோ அல்லது புத்திரகாரகராகிய குருவுடன் நல்ல ஸ்தானங்களில் அசுபர் பார்வை இன்றி இணைந்திருந்தாலோ புத்திரர்கள் மூலம் தனயோகம் கிடைக்கும்.

அதிலும் குறிப்பாக லக்கினம் விசேஷ அம்சத்திலிருக்க வேண்டியது அவசியம் என்று மூல நூல்கள் குறிப்பிட்டு இருந்தாலும் லக்கினதிபதி நல்ல பலமான நிலையில் இருந்தாலே இந்த யோகம் கிட்டும்.

இந்த யோகமுள்ளவர்கள் குழந்தை பிறந்ததும் நல்ல செல்வ வளம் பெறுவார்கள் அல்லது பிள்ளைகள் வளர்ந்து பெரியவனாக பெரியவளாக வளர்ந்து நல்ல சம்பாத்தியம் செய்து தகப்பனை சுகமாக வைத்திருப்பார்கள் (அல்லது) தகப்பன் பிள்ளை இருவரும் சேர்ந்து தொழில் வியாபாரம் செய்து தன யோகம் பெற்று விட முடியும்.அதாவது பலம் குறைந்தோ, நீசமாகியோ, பகைபெற்றோ இருந்தால் தனயோகம் கிட்டாது.

– பரிகார ஜோதிடர் S.காளிராஜன்,
ராஜஸ்ரீ ஜோதிட நிலையம்
இலத்தூர், நெல்லை மாவட்டம்
தொடர்பு எண்: 9843710327

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe