தனயன் வழியில் தந்தைக்கு தன யோகம்! ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

Navagraha astro - 2026

பிள்ளைகள் மூலம் தனயோகம், (அல்லது) புத்ர மூலதனயோகம் …

நல்ல தந்தை அமைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். நல்ல மனைவி மக்கள் அமையவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் மூலம் தனயோகம் அடைய முடியும்.

எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர்களைக் கவனியாமல் எப்படியோ போகட்டு மென்று விட்டு விடுகின்றார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளிருந்தும் கஷ்டப்படுவதை நடைமுறையில் பார்க்கிறோம் பார்த்துக் கொண்டும் இருக்கின்றோம்.

குழந்தை பிறந்ததும் குடும்பத்துக்கே யோகம் உண்டாவதும் உண்டு. இக்குழந்தையால் குடும்பத்திற்கு யோகம் உண்டா? என  அனைவரும்  ஜோதிடர்களை அணுகிக் கேட்டும் வருகிறார்கள். என்ன செய்வது யோகமுள்ள குழந்தை பிறக்கவும் ஜாதகத்தில் யோகம் இருக்க வேண்டும் அல்லவா?

ஆகா ! இந்தக் குழந்தை பிறந்ததும் அவன் தந்தை அமோகமாக உயர்ந்த நிலை அடைந்து விட்டான் என சிலர் மூக்கு மேல் விரல் வைத்தும் கூறுவதும் உண்டு.

இந்தக் குழந்தை பிறந்ததும் அவன் தந்தை சொத்து சுகத்தையெல்லாம் இழந்து அனைத்தும் நாசமாக்கி விட்டது என்று சிலர் வருத்தப் படுவதையும் நாம் பார்க்கிறோம்.

அது குழந்தையின் பாக்கியமோ, துர்பாக்கியமோ என்றாலும் கூட இரண்டு நிலையுமே தகப்பன் ஜாதகத்திலும் பிரதிபலிக்கும்  என்பதை மறந்து குழந்தையின் மீது பழி சுமத்தி விடக் கூடாது.

குழந்தை பிறந்ததும் சில நேரம் தந்தை யோகக்காரர் ஆகி விடவும் வாய்ப்பு உண்டு. சில நேரம் ஆண்டியாக்கி விடவும் கூடும்.

நல்ல குழந்தை பெற தகப்பன் ஜாதகத்திலும் யோக பலம் இருக்க வேண்டியது அவசியம் தான்.

ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்து அதிபதியானவர் 5ம் இடத்து அதிபதியுடனோ அல்லது புத்திரகாரகராகிய குருவுடன் நல்ல ஸ்தானங்களில் அசுபர் பார்வை இன்றி இணைந்திருந்தாலோ புத்திரர்கள் மூலம் தனயோகம் கிடைக்கும்.

அதிலும் குறிப்பாக லக்கினம் விசேஷ அம்சத்திலிருக்க வேண்டியது அவசியம் என்று மூல நூல்கள் குறிப்பிட்டு இருந்தாலும் லக்கினதிபதி நல்ல பலமான நிலையில் இருந்தாலே இந்த யோகம் கிட்டும்.

இந்த யோகமுள்ளவர்கள் குழந்தை பிறந்ததும் நல்ல செல்வ வளம் பெறுவார்கள் அல்லது பிள்ளைகள் வளர்ந்து பெரியவனாக பெரியவளாக வளர்ந்து நல்ல சம்பாத்தியம் செய்து தகப்பனை சுகமாக வைத்திருப்பார்கள் (அல்லது) தகப்பன் பிள்ளை இருவரும் சேர்ந்து தொழில் வியாபாரம் செய்து தன யோகம் பெற்று விட முடியும்.அதாவது பலம் குறைந்தோ, நீசமாகியோ, பகைபெற்றோ இருந்தால் தனயோகம் கிட்டாது.

– பரிகார ஜோதிடர் S.காளிராஜன்,
ராஜஸ்ரீ ஜோதிட நிலையம்
இலத்தூர், நெல்லை மாவட்டம்
தொடர்பு எண்: 9843710327

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories