December 5, 2025, 4:33 PM
27.9 C
Chennai

திருவேடகம் சதுர்வேத கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம்!

thiruvedagam mandalabishekam - 2025

மதுரை, திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள, அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கணபதியை தரிசனம் செய்து சென்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகில் அமைந்துள்ள அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில். கும்பாபிஷேகம் கடந்த வைகாசி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற நிலையில் கோவிலின் முன்பு மண்டல அபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

கோவில் முன்பு யாக வேள்வி நடைபெற்று, நந்தி பகவானுக்கு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சதுர்வேத கணபதிக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்டப்பட்டது . தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது .

இதில் ,திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால், சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கணபதியை தரிசனம் செய்து சென்றனர்.


ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில் வீடு கிடைமாட்டுத்தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம்!

அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவில் வீடு கிடைமாட்டுத்தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பங்கேற்றார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவில்வீடு, கிடை மாட்டுத் தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சிவாச்சாரியார் பிரகாஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் நேற்று கணபதி பூஜையுடன் முதலாம் கால யாகசாலை நிகழ்ச்சியினை தொடங்கினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நேற்று காலை இரண்டாம் கால யாக நிகழ்ச்சி தொடங்கி மகா பூர்ணாஹூதியுடன் யாகசாலை நிகழ்ச்சி நிறைவுபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து அதிர் வேட்டுக்கள் மேளதாளம் முழங்க பக்தர்களின் விண்ணதிரும் கரகோஷத்துடன் கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவிலின் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலில் அறுசுவை அன்னதானத்தினை முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தொடங்கி வைத்து உணவு அருந்தினார் மதுரை மேற்கு தெற்குஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


வளர்பிறை பஞ்சமி விழா!

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமியை , ஒட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள், அர்ச்சணைகள் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories