நமிநந்தியடிகள் குருபூஜை; பேரொளி வழிபாடு

nami nandi adigal nayanar guru pooja - 2026

“வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா”…..”நமிநந்தியடிகள் குருபூஜை” &
“பேரொளி வழிபாடு” :30-5-17…”ராசிபுரம் அறம்வளர்த்தநாயகி உடனுறை
கைலாசநாதர் திருக்கோயில்”..

சேலத்தில் இருந்து 25 கிமீ…ஆலய  தொடர்புக்கு:9443515036..திருவாரூர் திருக்கோயிலில் நமிநந்தியடிகள் என்பவர் நாள்தோறும்நெய்விளக்குகள் ஏற்றி வைக்கின்ற தொண்டினைச் செய்து வந்தார்.[நமிநந்தியடிகள் பிறந்த ஊர் திருஏமப்பேரூர்[திருநெய்பேர்].]..

ஒருநாள் வீட்டிற்குச் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்ற நேரம் இல்லாது போயிற்று. உடனே அவர் கோயிலுக்கு அருகில் குடியிருந்த சமணர்களிடம் நெய் தந்திடக்கோரி வேண்டினார். மறுத்து விட்டனர் சமணர்கள்..”அக்னியையே கையில் ஏந்தியிருக்கிறாரே உங்கள் சிவபெருமான், அவருக்கு நெய்விளக்கு எதற்கு?” என்று கேலி பேசினார்கள்.

அப்போது சிவபெருமான், “கமலாலயக்குளத்து நீரை இட்டு விளக்கு ஏற்றுக” என்று அசரீரியாக ஆணையிட்டார். உடனே நமிநந்தி அடிகளும் திருவாரூர் கமலாலயக் குளத்து நீரைக் கொண்டு கோயிலுக்குள்ளே விளக்குகளில் விட்டு அவற்றை எரிய வைத்தார்.இதனைக்கண்ட சமணர்கள் சைவ சமயத்தின் பெருமை உணர்ந்து சைவத்தை தழுவினர்..

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் ,”நமிநந்தி அடிகள் தினசரி தீபத் திருப்பணி சிவனடியார்
திருக்கூட்டம்”சார்பில், நீரால் விளக்கேற்றிய நமிநந்தி அடிகள், பெரிய புராணம் பாடிய தெய்வச் சேக்கிழார் குரு பூஜை மற்றும் நமிநந்தி அடிகள் தீபப்பேரொளி விழா, 30-5-17அன்று நடக்கிறது.

அன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை, விநாயகர்  மற்றும் கலச பூஜையும், உலக நன்மைக்காக யாக வேள்வியும் நடக்கிறது. தொடர்ந்து, விநாயகர், கைலாசநாதர், அறம் வளர்த்த நாயகி,சுப்ரமணியர், நந்தியம்பெருமாள், அறுபத்து மூன்று நாயன்மார்கள்,
மூலவர், நமிநந்தி அடிகள், தெய்வச் சேக்கிழார், சோமஸ்கந்தர் ஆகியோருக்கு
திருமஞ்சன அபிஷேகம் நடக்கிறது.

காலை 11 மணிக்கு, பேரொளி வழிபாடும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு பக்தர்கள் கோவில் முழுவதும் அனைத்து சன்னதிகளிலும் திருவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள், நமிநந்தி அடிகள்,தெய்வச்சேக்கிழார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்..

“வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா”..

ஆம்!

திருக்கோயில்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜோதி வடிவான நம் ஈசனை அன்பெனும் பிடிக்குள் சிக்கெனப்பிடித்து நம் மனதுக்குள் தந்தானன தருவானை நாம் கேட்டு பெறுஓம்.ஆம்!

தந்தானை துதிப்போம்..

கட்டுரையாக்கம்:அன்பன்.

ப்ரியமுடன்:சிவ.அ.விஜய் பெரியசுவாமி,

கல்பாக்கம்,9787443462.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories