December 6, 2025, 9:14 AM
26.8 C
Chennai

பூ அலங்காரங்களுடன் ஏழுமலையான் கோவில்! இன்று தேவஸ்தான ஊழியர்களுக்கு தரிசனம்!

thirupathi

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சோதனை அடிப்படையில் இன்று முதல் தேவஸ்தான ஊழியர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ஆந்திர மாநில அரசு வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, முதல் 3 நாட்களுக்கு சோதனை முறையில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 79 நாட்களாக அர்ச்சகர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வந்த நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று தேவஸ்தான ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

thurupathi

நீண்ட நாட்களுக்குப் பின்னர் கோயில் திறக்கப்பட்டதால் இரண்டரை டன் மலர்களைக் கொண்டு, கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாமி தரிசன வரிசைகள் மற்றும் லட்டு வழங்கும் கவுண்டர்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏழுமலையானை தரிசம் செய்ய நாளை மறுநாள் உள்ளூர் பக்தர்களுக்கும், வரும் 11 ஆம் தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், தரிசன முன்பதிவுக்கான 300 ரூபாய் டிக்கெட் விற்பனை இன்று முதல் ஆன்லைனில் தொடங்கும் எனவும், நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

thirupathi
thirupathi

10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க 6 அடி தூரத்தில் தரையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். மேலும் குடிநீர் குழாய்கள் கால் விரலில் அழுத்தினால் இயங்குமாறு அமைக்கபட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories