கேரளா அனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலை மரணம்..

Published:

5f9524b5c1ba7 1 - 2026
757016 mandir - 2026

கடவுளின் சொந்த தேசம் கேரளா காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம்
ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார் பபியா உயிரிழந்தது.பக்தர்கள் மலரதூவி அஞ்சலி செலுத்தினர்.

கேரளா காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம்
ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் பிரபலமான ஸ்தலம் என்றால் இங்கு உள்ள குளத்தில் வசித்த முதலை மிக பிரபலமான தாகும்.

பூஜை நேரங்களில் குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து ஸ்வாமியை தரிசித்து விட்டு ப்ரஸாதம் பெற்றுவிட்டு பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தாது அமைதியாக குளத்திற்கு திரும்பிவிடுவார் இந்த முதலையார்.

என்ன தான் குளத்தில் வசித்தாலும் குளத்திலுள்ள மீன்களை உட்கொள்ளாது இந்த முதலை.கோவில் ப்ரஸாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்ததால் இவருக்கு சைவ முதலை என்ற மற்றொரு பெயருண்டு .

நேற்று இந்த முதலையாழ்வார் உடல்நல குறைவால் வைகுந்த ப்ராப்தம் அடைந்தார்.பக்தர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img