கோல்கட்டாவில் கொடி கட்டிய இந்தியா! ஹாட்ரிக் எடுத்த குல்தீப்!

கோல்கட்டா:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கோலி அரை சதம், குல்தீப் ‘ஹாட்ரிக்’ கைகொடுக்க இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது போட்டி, கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 7 ரன் எடுத்து ஏமாற்றினார். ரகானே, கேப்டன் கோலி ஜோடி அபாரமாக விளையாடியது. கோலி அரை சதமடித்தார். ரகானேவும் அரை சதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த போது ரகானே (55) ரன் அவுட்டானார். மணிஷ் பாண்டே (3), கேதர் ஜாதவ் (24) சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, கோலி 92 ரன் எடுத்து சதம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார். தோனி 5 ரன்களில் வெளியேற, குல்தீப் டக்-அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 252 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

பின்னர் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. புவனேஷ்வர் ‘வேகத்தில்’ கார்ட்ரைட் (1), வார்னர் (1) ஆட்டமிழக்க, ஹெட் 39 ரன்களில் அவுட்டானார். சகால் ‘சுழலில்’ மேக்ஸ்வெல் (14) சிக்கினார். ஸ்மித் (59) அரை சதம் கடந்தார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

பின், குல்தீப் ‘சுழல்’ ஜாலத்தில், இவர் வீசிய 33வது ஓவரின் 2வது பந்தில் வேட் (2) ஆட்டம் இழந்தார். தொடர்ந்து 3,4வது பந்தில் ஏகார், கம்மின்சை டக்-அவுட்டாக்கி, முதல் முறையாக ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவரில் 202 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், குல்தீப் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

ஒரு நாள் அரங்கில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 3வது இந்திய வீரரானார் குல்தீப். இதற்கு முன், சேட்டன் சர்மா (எதிர்- நியூசி.,-1987, நாக்பூர்), கபில் தேவ் (எதிர்- இலங்கை, கோல்கட்டா, 1991) ஆகியோர் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories