IPL 2022: ராஜஸ்தான், குஜராத் அணிகள் தொடர் வெற்றி!

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – 2 ஏப்ரல் 2022 – இரண்டு போட்டிகள்
ராஜஸ்தான், குஜராத் அணிகள் தொடர் வெற்றி
– K.V. பாலசுப்பிரமணியன் –

நேற்று ஏப்ரல் இரண்டாம் நாள் இரண்டு போட்டிகள் நடந்தன. முதல் போட்டி மும்பையின் டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடந்தது. ஐ.பி.எல்லின் ஒன்பதாவது போட்டியான இதில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும் மோதின. அடுத்த போட்டி புனேயில் நடந்தது. பத்தாவது ஐபிஎல் போட்டியான இதில் குஜராத் அணியும் டெல்லி அணியும் மோதின.

ராஜஸ்தான் vs மும்பை

டாஸ் வென்ற மும்பை அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா ராஜஸ்தான் அணியை மட்டையாடச் சொன்னார். பும்ராவின் ஒரு பிரமாதமான பந்தால் தொடக்க ஆட்டக்காரர் யசஷ்வி ஜெய்ஸ்வால் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் ஜோஸ் பட்லர் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். பசில் தம்பி வீசிய நான்காவது ஓவரில் மூன்று சிகஸ், இரண்டு ஃபோர் அடித்தார். ஆனால் ஆறாவது ஓவரில் தேவதத் படிக்கல் (7 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சஞ்சு சாம்சனும் ஜோஸ் பட்லரும் இணைந்து ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை மிக வேகமாக நகர்த்தினர். 14.2 ஆவது ஓவரில் சஞ்சு ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 130.

17ஆவது ஓவரை போலார்ட் வீச வந்தார். ராஜஸ்தான் அணியின் ஹெட்மையர் அந்த ஓவரில் இரண்டு சிக்சர், இரண்டு ஃபோர் அடித்தார். 19ஆவது ஓவரில் பட்லர் தனது 100 ரன்களை அடித்தார். இது ஐபிஎல்லில் அவரது முதல் சதம். அந்த ஓவரில் பும்ரா மூன்று விக்கட்டுகளை எடுத்தார். அதனால் ரன்ரேட் குறைந்தது. இவ்வாறு ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆட வந்த மும்பை அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அடுத்து ஆட வந்த அமோல்ப்ரீத் சிங் நாலாவது ஓவரில் அவுட்டானார். இஷான் கிஷன் (54 ரன்), திலக் வர்மா (61 ரன்) நன்றாக விளையாடினர்கள். இந்த நேரத்தில் அஷ்வினும் சஹாலும் இரண்டு ஓவர்களை மிகச் சிறப்பாக வீசினர். 15ஆவது ஓவரில் அஶ்வின் திலக் வர்மாவின் விக்கட்டை எடுத்தார். அடுத்த ஓவரில் சஹால் இரண்டு விக்கட்டுகளை எடுத்தார்.

அப்போது மீதமுள்ள 24 பந்துகளில் 57 ரன் எடுக்கவேண்டியிருந்தது. பொலார்ட் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் சிக்சர் அடிப்பார்; ஃபோர் அடிப்பார் என அனைவரும் காத்துக் கொண்டிருக்க, அவர் டொக்கு வைத்துக் கொண்டிருந்தார். இறுதியில் ஒரு ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தை மும்பை இழந்தது.

குஜராத் vs டெல்லி

டெல்லி அணி டாஸ் வென்று குஜராத் அணியை பேட்டிங் செய்யச் சொன்னது. குஜராத் அணி வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். ஷுப்மன் கில் (84 ரன்), விஜய் ஷங்கர் (13 ரன்), ஹர்திக் பாண்ட்யா (31 ரன்), மில்லர் (20 ரன்), திவாத்தியா (14) ரன் என அனைவரும் நன்றாக விளையாடினர். டெல்லி அணியில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் மூன்று விக்கட்டுகள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்திருந்தது.

அடுத்த ஆட வந்த டெல்லி அணியின் முதல் விக்கட்டை, இரண்டாவது ஓவரில் ஹர்திக் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா நன்றாக பேட்டிங் செய்வதும், நான்கு ஓவரையும் முழுவதுமாக வீசுவது மட்டும் இல்லாமல் இந்தப் போட்டியில் தொடக்க பந்து வீச்சாளராக பந்து வீசியது இந்திய அணியில் அவர் இடம் பெற மற்றொரு வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சொல்லுகிறது.

டெல்லி அணியில் ப்ரித்வி ஷா இன்று சோபிக்கவில்லை. ரிஷப் பந்த் 29 பந்துகளில் 43 ரன் எடுத்தார். ஆனால் அவர் இன்னும் ஒரு ஐந்து ஓவராவது ஆடியிருக்க வேண்டும். அவர் 14.1 ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் குஜராத் அணி சிறப்பாக பந்து வீசி டெல்லி அணியை 157 ரன்களுக்கு அவுட்டாக்கியது. இதனால் குஜராத் அணி வெற்றிபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories