April 23, 2025, 4:07 PM
34.3 C
Chennai

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

ஐ.பி.எல் 2025 –இரண்டு ஆட்டங்கள்- 19.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

டெல்லி கேபிடல்ஸ் அணியை (203/8, அக்சர் படேல் 39, அஷுதோஷ் ஷர்மா 37, கருண் நாயர் 31, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 31, அபிஷேக் போரல் 18, பிரசித் கிருஷ்ணா 4/41, முகம்மது சிராஜ், அர்ஷத் கான், இஷாந்த் ஷர்மா, சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்) குஜராத் டைடன்ஸ் அணி (19.2 ஓவர்களில் 204/3, ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 97, ரூதர்ஃபோர்டு 43, சாய் சுதர்ஷன் 36, ராகுல் திவாத்தியா ஆட்டமிழக்காமல் 11, முகேஷ் குமார், குல்தீப் ஷர்மா தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரல் (9 பந்துகளில் 18 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தபோதும் அதிரடியாக விளையாடினார்.

மற்றொரு தொடக்க வீரர் கருண் நாயர் (18 பந்துகளில் 31 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) கே.எல். ராகுல் (14 பந்துகளில் 28 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து விளையாடி ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த அக்சர் படேல் (32 பந்துகளில் 39 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (21 பந்துகளில் 31 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), அஷுதோஷ் ஷர்மா (19 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி எட்டு விக்கட் இழப்பிற்கு 203 ரன் எடுத்தது.

ALSO READ:  ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம்!

          20 ஓவர்களில் 204 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக விளையாட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரரும் அணியின் அணித்தலைவருமான ஷுப்மன் கில் (7 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர், தமிழக வீரர் சாய் சுதர்ஷன் (21 பந்துகளில் 36 ரன்) எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய ஜாஸ் பட்லர் (54 பந்துகளில் 97 ரன், 11 ஃபோர், 4 சிக்சர்) இன்று அற்புதமாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவரோடு இணைந்து ஆடிய ரூதர்ஃபோர்டு (34 பந்துகளில் 43 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ராகுல் திவாத்தியா (3 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் குஜராத் அணிக்கு 19.2 ஓவர்களில் வெற்றியைத் தேடிதந்தனர்.

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

லக்னோ vs ராஜஸ்தான்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (180/5, எய்டன் மர்கரம் 66, ஆயுஷ் பதோனி 50, அப்துல் சமத் 30, ஹசரங்கா 2/31, ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே தலா ஒரு விக்கட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (178/5, யசஷ்வீ ஜெய்ஸ்வால் 74, ரியன் பராக் 39, வைபவ் சூர்யவன்ஷி 34, ஆவேஷ் கான் 3/37, ஷர்துல் தாகூர் 1/34, எய்டன் மர்கரம் 1/18) 2 ரன் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

          பூவாதலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் (4 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான எய்டன் மர்க்ரம் (45 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) நிக்கோலஸ் பூரன் (11 ரன்), ரிஷப் பந்த் (3 ரன்) மற்றும் ஆயுஷ் பதோனி (34 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர் 1 சிக்சர்) நன்றாக ஆடினார். கடைசி ஓவரில் நாலு சிக்சர் அடித்து, அப்துல் சமத் (10 பந்துகளில் 30 ரன்) அணியின் ஸ்கோரை, 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 180 ரன் என உயர்த்தினார்.

          181 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் இன்று சஞ்சு சாம்சன் ஆடவில்லை. தொடக்க வீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (52 பந்துகளில் 74 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்), இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (20 பந்துகளில் 34 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) ராஜஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர்.

ALSO READ:  சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

நிதீஷ் ராணா (8 ரன்) இன்று சரியாக ஆடவில்லை. ரியான் பராக் (26 பந்துகளில் 39 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), துருவ் ஜுரல் (ஆட்டமிழக்காமல் 6 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர் (12 ரன்), ஷுபம் துபே (ஆட்டமிழக்காமல் 3 ரன்) ஆகியோர் வெற்றி இலக்கை எட்ட முயற்சி செய்தும் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 178 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

          14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இன்று ராஜஸ்தான் அணிக்காக முதன் முறையாக ஆடி 34 ரன் எடுத்தது சிறப்பானது. லக்னோ அணியின் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Entertainment News

Popular Categories