தற்போது உள்ள வீரர்கள் யாரும் தன்னிடம் அறிவுரை கேட்பதில்லை: கவாஸ்கர்

Published:

08 Aug 08 Gavaskar - 2026இந்திய அணி வீரர்களில் அஜிங்கியா ரெகானே தவிர, வேறு யாரும் தம்மிடம் அறிவுரைகள் கேட்பதில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். சச்சின் தெண்டுல்கர், டிராவிட், சேவாக் ஆகியோர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன்னர், தம்மை சந்தித்து பலமணி நேரம் உரையாடுவார்கள் என்று கூறினார்.

ஆனால், தற்போது உள்ள வீரர்களோ முற்றிலும் மாறுபட்டபவர்களாக இருப்பதாகவும், அவரவர்க்கென்று பயிற்சியாளர்கைளை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ரெகானே மட்டும் தம்மை அடிக்கடி சந்தித்து பல்வேறு விஷயங்களை பற்றி கலந்துரையாடுவார் என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img