December 5, 2025, 5:18 PM
27.9 C
Chennai

கெட்அவுட்ஸ்டாலின் #GetOutStalin – அண்ணாமலை தொடங்கி வைதத சமூகத்தளப் போர்!

getoutstalin post by annamalai - 2025

மேடை போட்டு அரசியல் பேசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது சமூக தளத்திலும் நேரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது எவருடைய ஐ டி விங் பலமாக இருக்கிறது என்பதை அறியும் பலப் பரிட்சையாக திமுக விங் மற்றும் பாஜகவின் ஐடி விங் ஆகியவற்றுக்கு இடையே சமூகத்தள போர் தொடங்கியுள்ளது. கோ பேக் மோடி என்ற # மூலம் திமுக ஐடி விங் செய்து வந்த அரசியலுக்கு இப்போது பாஜக பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு போரை தொடங்கியுள்ளார்.

கெட் அவுட் ஸ்டாலின் #GetOutStalin என சமூக வலைதளத்தில் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க., ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மற்றும் ஊழல் நடக்கிறது. தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றிவிட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.

ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியலை தி.மு.க., அரசு நடத்துகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த தி.மு.க., அரசு விரைவில் மக்களால் வெளியேற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கெட் அவுட் ஸ்டாலின் #GetOutStalin என்று அவர் தொடங்கி வைத்துள்ள hashtag அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் வர தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தப் போராட்டமே தாய் மொழியை தொடர்புபடுத்தி ஏற்பட்டது என்பதால் அது இன்னும் சூடு பிடித்துள்ளது.

தமிழின் மீது பற்று உள்ளவர்கள் போல் நாடகமாடும் திமுகவினர் எப்படிப்பட்ட தமிழ் இன அழிப்பு மற்றும் தமிழ் மொழி அழிப்பு வேலைகளை செய்து வருகின்றனர் என்பதை பொதுமக்களிடம் முன்வைத்து வருகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் இரண்டு மொழிகளை மட்டுமே படித்து தமிழகத்துக்குள் திமுகவுக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டு வேலைக்காரர்களாக இருக்க வேண்டும் அதே நேரம் திமுகவினர் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடித்து அதிக அளவில் கல்விக் கட்டணங்களை வசூல் செய்து கோடிக்கணக்கில் மிதந்து வருகின்றனர் என்பதையும், தங்கள் குடும்ப இளைய தலைமுறை மூன்று மொழிகளையும் வேறு நாட்டின் மொழிகளையும் படிப்பதற்கு பணம் கொடுத்து ஏற்பாடு செய்து வருவதையும் குறிப்பிட்டு இந்த போரை தொடங்கியுள்ளார்.

ஆனால் இது தமிழ் மொழிக்கு எதிரானது என்ற திமுக அரசின் வாதத்தை பொய்யாக்கி தாங்கள் தமிழ் மொழியை மாற்ற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக எடுக்க வைத்து பரப்புவோம் என்றும் அதேபோல் தமிழகத்தில் இந்தியாவின் மொழிகளில் ஏதேனும் ஒன்றை மூன்றாவது மொழியாக சிறுவயதில் மாணவர்கள் படித்துக் கொள்ள வேண்டும் என்பதையே தாங்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டு அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தினார்.

இன்று சர்வதேச தாய் மொழிகள் தினம் என்பதால் தமது தமிழ் பற்றை வெளிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த பதிவுகளையும் அண்ணாமலை செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது…

அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு

@narendramodi அவர்கள் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories